Eid Milad un Nabi 2022: முஹம்மது நபியின் பிறப்பை எவ்வாறு கொண்டாடுவது..? இந்த நாளின் சிறப்புகள் என்ன..?
Eid Milad un Nabi 2022: இஸ்லாமியர்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான மிலாடி நபி, இந்தியாவில் அக்டோபர் 8ஆம் தேதி மாலை தொடங்கி அக்டோபர் 9ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
இஸ்லாமியர்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான மிலாடி நபி, இந்தியாவில் அக்டோபர் 8ஆம் தேதி மாலை தொடங்கி அக்டோபர் 9ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இஸ்லாமிய பண்டிகையான மிலாடி நபி, முஹம்மது நபி அவர்களின் பிறந்த நாளை நினைவு கூறும் நாளாக கொண்டாடப்படுகிறது. இஸ்லாத்தின் கடைசி தூதர் நபிகள் நாயகம் கி.பி 570 இல் ரரபீயுல் அவ்வல் 9,மெக்கா (மக்கா) நகரில் பிறந்தார்.
இந்த பண்டிகை உலகில் வாழும் இஸ்லாமிய குடும்பம் மற்றும் நண்பர்களுடன் கூடும் நாளாகக் கருதப்படுகிறது. இந்த பண்டிகை, ஒவ்வொரு ஆண்டும் மாறுபடும், ஏனெனில் இது சந்திரனைப் பார்ப்பது மற்றும் இஸ்லாமிய நாட்காட்டியின் ரபி உல் அவலில் மூன்றாவது மாதத்தின் தொடக்கத்தைப் பொறுத்தது.
இந்தியா முழுவதும் உள்ள இஸ்லாமியர்களுக்கு இது ஒரு நல்ல நாள் ஆகும். ஏனெனில் இது புனித நபியின் கருணை, இரக்கம் மற்றும் போதனைகளை அவர்களுக்கு நினைவூட்டுகிறது. முஹம்மது நபியின் போதனைகள் சமூகத்திற்கு மதிப்புமிக்கவை ஆகும்.