MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • ரயில்களில் வெள்ளை நிற பெட்ஷீட்கள் வழங்கப்படுவது ஏன்? இதுதான் காரணமா?

ரயில்களில் வெள்ளை நிற பெட்ஷீட்கள் வழங்கப்படுவது ஏன்? இதுதான் காரணமா?

இந்திய ரயில்வேயின் ஏசி பெட்டிகளில் பயணம் மேற்கொள்ளும் பயணிக்கு போர்வை மற்றும் தலையணைகள் வழங்கப்படுகின்றன. உங்களுக்கு வழங்கப்படும் படுக்கை விரிப்புகள் மற்றும் தலையணை உறைகள் எப்போதும் வெள்ளை நிறத்தில் இருப்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா?

2 Min read
Ramya s
Published : Sep 05 2024, 02:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Indian Railway Bedsheet

Indian Railway Bedsheet

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை போக்குவரத்து முறையாக இந்திய ரயில்வே உள்ளது. 68,000 கிலோமீட்டருக்கு மேல் ரயில் பாதைகளுடன், இந்திய ரயில்வே உலகின் 4வது பெரிய ரயில்வே நெட்வொர்க் ஆகும். இதில் 45 ஆயிரம் கிலோமீட்டருக்கும் அதிகமான மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதைகள் உள்ள. ஒரே அரசாங்கத்தால் இயக்கப்படும் மிக முக்கியமான இரயில் பாதையும் இந்திய ரயில்வே தான்.

வசதியான பயணம், கட்டணம் குறைவு உள்ளிட்ட பல காரணங்கள் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். குறிப்பாக தொலைதூர பயணங்கள் என்று வரும் போது ரயில் பயணங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே பல்வேறு அம்சங்களை செயல்படுத்தி வருகிறது.

25
Indian Railway Bedsheet

Indian Railway Bedsheet

அந்த வகையில் இந்திய ரயில்வேயின் ஏசி பெட்டிகளில் பயணம் மேற்கொள்ளும் பயணிக்கு போர்வை மற்றும் தலையணைகள் வழங்கப்படுகின்றன. இந்த போர்வைகள் மற்றும் தலையணை கவர்கள் தினமும் துவைக்கப்பட்டு ரயிலில் பயணிக்கும் ஒவ்வொரு பயணிக்கும் புதியதாக கொடுக்கப்படுகிறது.

உங்களுக்கு வழங்கப்படும் படுக்கை விரிப்புகள் மற்றும் தலையணை உறைகள் எப்போதும் வெள்ளை நிறத்தில் இருப்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? இந்திய இரயில்வே எப்போதும் உங்கள் பயணத்திற்காக பெட் ஷீட் மற்றும் தலையனைகளை வழங்குகிறது.

35
Indian Railway Bedsheet

Indian Railway Bedsheet

இது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல மாறாக ரயில்வேயின் நன்கு திட்டமிடப்பட்ட உத்தி. அதன் பின்னணியில் உள்ள காரணத்தை தற்போது பார்க்கலாம்.. இந்திய இரயில்வே தினசரி அடிப்படையில் ஏராளமான ரயில்களை இயக்குகிறது, ஒவ்வொரு நாளும் பல ஆயிரம் பெட்ஷீட்கள் மற்றும் தலையணை உறைகள் பயன்படுத்தப்பட வேண்டும். இந்த தலையணை கவர் மற்றும் போர்வைகள் ஏசி பெட்டிகளில் பயணிகளுக்கு வழங்கப்படுகின்றன.

ஒருமுறை பயன்படுத்தப்பட்ட போர்வைகள் சுத்தம் செய்வதற்காக மீண்டும் சேகரிக்கப்படுகின்றன. இந்த போர்வைகளை சுத்தம் செய்ய சிறப்பு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதாவது 121 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் நீராவி உருவாக்கும் பெரிய கொதிகலன்கள் பொருத்தப்பட்ட சிறப்பு இயந்திரங்கள் மூலம் இந்த பெட்ஷீட் மற்றும் தலையணை கவர்கள் சுத்தம் செய்யப்படுகிறது. பெட்ஷீட்கள் 30 நிமிடங்களுக்கு இந்த நீராவிக்கு உட்படுத்தப்பட்டு, அவை முழுமையாக கிருமி நீக்கம் செய்யப்படுவதை உறுதி செய்கிறது.

45
Indian Railway Bedsheet

Indian Railway Bedsheet

இத்தகைய கடுமையான சலவை நிலைமைகளுக்கு வெள்ளை பெட்ஷீட்கள் மிகவும் பொருத்தமானதாகக் காணப்படுகின்றன. அவை ப்ளீச்சிங்கிற்கு சிறப்பாக பதிலளிக்கின்றன, இது சுகாதாரம் மற்றும் தூய்மையை பராமரிக்க அவசியம். கடுமையான சலவை செயல்முறை, அதிக வெப்பநிலை ஆகியவற்றிற்கு உட்படுத்தினாலும் வெள்ளை நிறம் மங்காது. ஆனால் மற்ற துணிகள் எளிதில் மங்கத் தொடங்கி விடும்.

வெள்ளை படுக்கை விரிப்புகளை திறம்பட ப்ளீச் செய்து, அவற்றின் பிரகாசத்தைத் தக்கவைத்து, மீண்டும் மீண்டும் துவைத்தாலும் துணிக்கு சுத்தமான, பளபளப்பான தோற்றத்தைக் கொடுக்கும். வெள்ளை நிற பெட்ஷீட்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், இந்திய ரயில்வே பயணிகளுக்கு வழங்கப்படும் துணிகள் சுத்தமாக இருப்பதுடன் மட்டுமல்லாமல் பார்வைக்கு ஈர்க்கக்கூடியதாகவும் இருப்பதை உறுதி செய்கிறது.

55
Indian Railway Bedsheet

Indian Railway Bedsheet

அதுமட்டுமின்றி, வெவ்வேறு வண்ண படுக்கை விரிப்புகளைப் பயன்படுத்தினால், அவற்றை ஒன்றாக சேர்த்து சுத்தம் செய்யும் போது வண்ணங்கள் கலப்பதைத் தடுக்க தனித்தனியாக சுத்தம் செய்ய வேண்டும். ஆனால் வெள்ளை நிற போர்வைகளில் இந்த பிரச்சனை இருக்காது. இவற்றை ஒன்றாக ப்ளீச் செய்தாலும் எந்த பிரச்சனையும் இல்லை.

மற்ற நிறங்களுடன் ஒப்பிடுகையில், வெள்ளை நிற துணிகளை பராமரிப்பது எளிது. மீண்டும் மீண்டும் துவைத்தாலும், நிறம் மங்காது. ப்ளீச்சிங் மற்றும் அடிக்கடி கழுவிய பிறகும் வெள்ளை நிறங்கள் சுத்தமாகவும் பிரகாசமாகவும் இருக்கும். எனவே, பயணிகளுக்கு வழங்கப்படும் படுக்கையறைகள் சுகாதாரமானதாகவும், கிருமிகளற்றதாகவும் இருப்பது மட்டுமின்றி, அழகாகவும் இருப்பதை உறுதிசெய்ய ரயில்வே வெள்ளை நிறத்தைப் பயன்படுத்துகிறது. இதுவே வெள்ளை நிற போர்வைகள் மற்றும் தலையணை கவர்களை இந்திய ரயில்வே வழங்குவதற்கு முக்கிய காரணமாகும். 

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
இந்திய இரயில்வே
தமிழ் செய்திகள்
இந்திய இரயில்வே
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved