MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Snake Prevention Tips : உங்க வீட்டுல இந்த பொருள்கள் இருக்கா? சீக்கிரமே பாம்புகள் வந்துடும்! ஜாக்கிரதை!

Snake Prevention Tips : உங்க வீட்டுல இந்த பொருள்கள் இருக்கா? சீக்கிரமே பாம்புகள் வந்துடும்! ஜாக்கிரதை!

பாம்புகளை வீட்டிற்குள் ஈர்க்கும் 5 வகையான விஷயங்களை இங்கு காணலாம்.

2 Min read
Kalai Selvi
Published : Sep 11 2025, 05:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : Getty

பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என்பார்கள். பலருக்கும் பாம்பு என்றால் பயம்தான். அதனால்தான் பாம்புகள் வீட்டிற்கு வராமல் தடுக்க பல விஷயங்களை செய்கின்றனர். ஆனாலும் சில நேரங்களில் பாம்புகள் வீட்டிற்குள் வந்து விடுகின்றன. இதற்கு பாம்புகளை ஈர்க்கும் சில பொருள்களை வீட்டில் வைத்திருப்பதுதான் காரணமாகும். அவை என்னென்ன பொருட்கள் என இங்கு காணலாம். இந்த பொருட்களை வீட்டிலிருந்து விலக்கி வைத்தால் பாம்புகள் வீட்டுக்கு வருவதை தடுக்க முடியும்.

26
Image Credit : Getty

உங்க வீட்டை சுற்றி மணம் வீசும் செடிகள் வைக்க வேண்டாம். வீட்டிற்கு முன் அல்லது வீட்டை சுற்றி நல்ல மணம் வீசும் பூச்செடிகள் வைத்தால் பாம்புகள் வீட்டிற்கு அடிக்கடி வர வாய்ப்புள்ளது. அதிலும் மல்லிகைச்செடி வைக்கவே வேண்டாம். அவை பாம்புகளை ஈர்க்கும். குங்குமப்பூ, சாமந்தி பூ வகை செடியான கெமோமில் போன்றவை பாம்புகளை ஈர்க்கின்றன.

Related Articles

Related image1
Snake Repellent: மழைக்காலத்தில் பாம்புகள் தொல்லையா? இந்த வழிகளை ட்ரை பண்ணி பாருங்க.. பாம்புகள் கிட்டவே வராது
Related image2
Snake Bite | ஐயோ.. பாம்பு கடிச்சிருச்சா? இப்படி மட்டும் பண்ணுங்க.. இப்படி எல்லாம் செய்யாதீங்க!
36
Image Credit : istockphoto

சிலர் தங்கள் தோட்டங்களில் உரம் போடுவதற்காக இலைகளைக் குவித்து வைப்பார்கள். இங்கு பாம்புகள் காணப்படுகின்றன. அழுகிப் போகும் குப்பைகளுக்கு அருகே எலிகள், பூச்சிகள். வருவது இயல்பு. அவற்றை உண்ண பாம்புகளும் வரக் கூடும். எனவே வீட்டைச் சுற்றி குப்பைகளைக் குவித்து வைக்காதீர்கள்.

46
Image Credit : istockphoto

சிலர் வீட்டை அழகுப்படுத்த வீட்டில் சின்ன தண்ணீர் தொட்டி அமைத்து அதில் தாமரை போன்ற தாவரங்களை வளர்க்கிறார்கள். இப்படி சிறிய தொட்டிகள் அமைத்தாலும் அதில் தவளைகள் குடியேறும். பாம்புகள் இவற்றை உண்ணும். அதனாலயே வருகின்றன. வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்கினால், சின்ன தொட்டிகள் அமைத்தால் கவனமாக இருங்கள். வெயில் நேரங்களில் குளிர்ச்சிக்காவும் பாம்புகள் இது மாதிரியான ஈரப்பதம் உள்ள இடங்களை தேடி வரும்.

56
Image Credit : Freepik

வீட்டை அழகுப்படுத்துவதாக நினைத்து கொடி போன்ற செடிகளை வீட்டில் வளர்க்கக் கூடாது. தரையில் அடர்த்தியாக வளரக்கூடிய புல்வெளிகளை வைக்க வேண்டாம். இவை பாம்புகளை ஈர்க்கக் கூடியவை. பாம்புகளுக்கு குளிர்ச்சியான சூழலை வழங்குவதால் அவை இங்கு வந்து தங்குகின்றன.

66
Image Credit : Getty

வீட்டில் அடர்ந்த மரங்கள், புதர்கள் போன்றவை வளர்க்க வேண்டாம். இவை விலங்குகள், பறவைகள், பூச்சிகளை ஈர்க்கக் கூடியவை. அவை வந்து தங்குவதால் பாம்புகளுன் அவற்றை உண்ண அங்கு வரும். வீட்டை சுற்றி புதர் போன்ற செடிகளை வளர்க்கவே கூடாது.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved