ஒரே வாரத்தில் முகத்தில் கருமை நீங்கி வெள்ளையாக வேண்டுமா? அதிமதுரம் பேஸ் பேக் இருக்கு, ஒருமுறை ட்ரை பண்ணுங்க...
Athimathuram Powder Uses for Face in Tamil: சருமத்தில் உள்ள கருமையைப் போக்கும் ஓர் எளிய பேஸ் பேக் குறித்து இந்த பதிவில் தெரிந்து வைத்து கொள்வோம்.
Athimathuram Powder
குளிர்காலத்தில் தான் சருமம் வறண்டு போய் விடும். காற்றில் ஈரப்பதம் குறைவதால் சருமம் உலர்வடைந்து விடும். இது போன்ற நேரத்தில், ஒவ்வொரு பெண்ணும் முகம் பொலிவு பெற வேண்டும் என்று விரும்புவது இயல்பான விஷயம் தான். அதற்காக பெரும்பாலான 'பெண்கள் பியூட்டி பார்லர்' சென்று தங்களை அழகுப்படுத்துவர். சிலர், சருமத்திற்கு போதுமான ஈரப்பதத்தை வழங்கும் எண்ணற்ற ரசாயனம் கலந்த பொருட்களை சந்தையில் வாங்கி பயன்படுத்துவர்.
Athimathuram Powder
அவை சில நன்மைகளை வழங்கினாலும் குறைபாடுகளையும் கொண்டிருக்கிறது. எல்லோருடைய சருமத்திற்கும் அவை ஒத்துக்கொள்வதில்லை. எனவே, குளிர் காலத்தில் உங்கள் சருமத்தை இயற்கை முறையில் பாதுகாக்க அதிமதுரம் பேஸ் பேக் உங்களுக்கு உதவியாக இருக்கும். வாருங்கள் இதனை எப்படி பயன்படுத்தலாம் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.
Image: Getty Images
தேவையான பொருட்கள்:
அதிமதுர பொடி - 2 டீஸ்புன்
தக்காளி - 1
பால் - 2 டீஸ்புன்
ரோஸ் வாட்டர் - 2 டீஸ்புன்
தேன் - 1 டீஸ்புன்
எலுமிச்சை சாறு - 1 /2 ஸ்பூன்
கடலைமாவு - 2 டீஸ்புன்
Athimathuram Powder
செய்முறை விளக்கம்:
ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் அதிமதுர தூள் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 1 /2 டீஸ்புன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்புன் தூய தேன், கடலைமாவு - 2 டீஸ்புன் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணவும். பிறகு அதில், பால், ரோஸ் வாட்டர் , தக்காளி சேர்த்து நன்றாக கலந்து பேஸ்ட் போல் ஆக்கி கொள்ளவும்.
பிறகு, உங்கள் முகத்தை தண்ணீரில் கழுவி உலர வைக்கவும் ஃபேஸ் பேக் எடுத்து முகம் மற்றும் கழுத்தில் போட்டு 10 முதல் 15 நிமிடங்கள் அப்படியே காய வைக்கவும். பின்பு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
Athimathuram Powder
அதிமதுரம் பயன்கள்:
இந்த மாஸ்க்கில் உள்ள அதிமதுரம் சருமத்தில் உள்ள கருமையான தழும்புகள் மற்றும் புள்ளிகளைப் போக்கி, சருமத்தை பளபளப்பாக வைத்து கொள்ளும். மேலும், தேனில் உள்ள பாக்ட்டீரிய எதிர்ப்பு பண்புகள், எலுமிச்சை சாற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன, அவை சருமத்தில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகின்றன.
மேலும், வறண்ட சருமம் உள்ளவர்கள் முகத்தில் ஈரப்பதத்தை தக்க வைத்து கொள்ள உதவுகிறது. அதிமதுரம் சருமத்திற்கு மட்டுமல்லாமல் உடலுக்கும் பல்வேறு நன்மைகளை தரும்.