இந்த 5 காய்கறிகளை ஃப்ரிட்ஜில் வைக்காதீர்கள்… பெரிய மிஸ்டேக்கை செய்யாதீங்க
5 Vegetables You Should Never Store in the Fridge : சந்தையில் இருந்து வாங்கும் எல்லா காய்கறிகளையும் ஃப்ரிட்ஜில் வைப்பது நல்லது என்ற எண்ணம் தவறு. சில காய்கறிகள் குளிரில் வைத்தால் சுவை, மணம் மற்றும் சத்துக்கள் குறைந்து விரைவில் கெட்டு போகும்.

ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாத காய்கறிகள்
சந்தையில் இருந்து காய்கறிகள் வாங்கி வந்தவுடன் நேராக ஃப்ரிட்ஜில் வைப்பது பலருக்கும் பழக்கமாகி விட்டது. “குளிரில் வைத்தால் நீண்ட நாள் பசுமையாக இருக்கும்” என்ற எண்ணமே அதற்குக் காரணம். ஆனால் நிபுணர்கள் சொல்வது வேற மாதிரி கதை. எல்லா காய்கறிகளும் குளிரை விரும்பாது. சில காய்கறிகள் ஃப்ரிட்ஜில் வைத்தால் சுவை, மணம், சத்துக்கள் எல்லாம் குறைந்து, விரைவில் கெட்டு போகும். அதனால் எந்த காய்கறிகளை ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாது என்று தெரிந்து வைத்துக் கொள்வது மிகவும் அவசியம்.
வெள்ளரிக்காய் சேமிப்பு
முதலில் வெள்ளரிக்காய். இதை குளிர்ச்சியாக சாப்பிட நல்லதென்று நினைத்து பலர் ஃப்ரிட்ஜில் வைப்பார்கள். ஆனால் 10°C க்கும் குறைவான வெப்பநிலையில் 2-3 நாட்கள் இருந்தாலே இது மஞ்சளாக மாறி கெட்டு போகும். குறிப்பாக தக்காளி, தர்பூசணி, அவகாடோ போன்ற பழங்களுடன் சேர்த்து வைத்தால் எத்திலீன் வாயு காரணமாக வெள்ளரிக்காய் சீக்கிரம் பழுதடையும். அதனால் இதை எப்போதும் நேரடி வெயிலில் இல்லாமல் அறை வெப்பநிலையிலேயே வைத்துக் கொள்ள வேண்டும்.
ஃப்ரிட்ஜ் தவறுகள்
அடுத்து பூண்டு. பூண்டின் நறுமணம், கசப்பான சுவை மற்றும் மருத்துவ குணங்கள் குளிரில் வைத்தால் குறைந்து விடும். ஃப்ரிட்ஜில் உள்ள ஈரப்பதம் பூண்டை விரைவாக முளைக்கவும், மென்மையாகவும் கெடவும் காரணமாகிறது. பலர் போலிதீன் கவர் அல்லது மூடியுள்ள டப்பாவில் வைத்து விடுவார்கள்; மேலும் ஈரப்பதத்தை அதிகரிக்கும். அதற்கு பதிலாக குளிர்ச்சியான, காற்றோட்டம் உள்ள உலர் இடத்தில் வைத்தால் பூண்டு நீண்ட நாள் நன்றாக இருக்கும்.
வெங்காயம் வைக்கும் முறை
வெங்காயமும் இதே போல ஃப்ரிட்ஜுக்கு பொருந்தாத ஒன்று. குளிரில் வைத்தால் அதில் உள்ள ஸ்டார்ச் சர்க்கரையாக மாறி, வெங்காயம் மென்மையாகி விடும். மேலும் ஈரப்பதம் காரணமாக முளைக்கவும் தொடங்கும். இருட்டான, காற்றோட்டம் உள்ள இடத்தில் வைத்தால் வெங்காயம் 1-2 மாதங்கள் வரை சீராக இருக்கும். மேலும் தக்காளியையும் ஃப்ரிட்ஜில் வைப்பது பெரிய தவறு. குளிர் வெப்பநிலை தக்காளியின் உட்கூறு அமைப்பை பாதித்து, அது சப்பையாகவும் சுவையற்றதாகவும் மாறும். அறை வெப்பநிலையில் வைத்தால் அதன் இயல்பான சுவை மற்றும் மணம் நீடிக்கும்.
காய்கறி சேமிப்பு டிப்ஸ்
இறுதியாக உருளைக்கிழங்கு. இதை ஃப்ரிட்ஜில் வைப்பது உடல்நலத்திற்கு ஆபத்தானது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். குளிரில் வைத்தால் ஸ்டார்ச் சர்க்கரையாக மாறி சமைக்கும் போது இனிப்பாகவும் நிறம் மாறும். மேலும், இவ்வாறு வைத்த உருளைக்கிழங்கை அதிக வெப்பத்தில் வறுத்தால் ‘அக்ரிலமைடு’ என்ற ரசாயனம் உருவாகும் அபாயம் உள்ளது. அதனால் இதை இருட்டான, உலர்ந்த இடத்தில் காற்றோட்டத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும். சமைத்த பிறகு மற்ற உருளைக்கிழங்கை மட்டும் குளிரவைத்து ஃப்ரிட்ஜில் வைப்பது சரியான நடைமுறை ஆகும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

