- Home
- Lifestyle
- Vegetables Pesticide Removal: காய்கறி, பழங்களில் படிந்து இருக்கும் ஆபத்து.. நீக்க 5 சூப்பர் டிப்ஸ்!
Vegetables Pesticide Removal: காய்கறி, பழங்களில் படிந்து இருக்கும் ஆபத்து.. நீக்க 5 சூப்பர் டிப்ஸ்!
காய்கறி, பழங்களின் மேல் படிந்து, நம் உடலுக்குள் சென்று மெதுவாக பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதனால் ஹார்மோன் சமநிலையின்மை, அலர்ஜி போன்றவைகள் ஏற்படுகின்றன.

பழங்கள் மற்றும் காய்கறிகள்
விவசாயத்தில் பூச்சிக்கொல்லி பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த பூச்சிக்கொல்லிகள் பயிர்களை நோய்களில் இருந்து பாதுகாத்தாலும், அதில் ஆபத்தான ரசாயனங்கள் உள்ளன. இந்த ரசாயனங்கள் காய்கறி, பழங்களின் மேல் படிந்து, நம் உடலுக்குள் சென்று மெதுவாக பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதனால் ஹார்மோன் சமநிலையின்மை, அலர்ஜி, கேன்சர் கூட வரலாம். அதனால் காய்கறிகளைச் சரியாகச் சுத்தம் செய்வது ரொம்ப முக்கியம்.
உப்பு நீரில் ஊறவைத்தல்
பூச்சிக்கொல்லிகளை நீக்குவதில் உப்புத் தண்ணீர் ஒரு சிறந்த வழி. ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி, 1 முதல் 2 டீஸ்பூன் உப்பு சேர்க்கவும். அதில் காய்கறிகள், பழங்களை 10 முதல் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். இந்த உப்பு கரைசல், காய்கறிகளின் மேல் உள்ள ரசாயனங்களை இளகச் செய்து, அவற்றை எளிதாக அகற்ற உதவுகிறது. கத்தரிக்காய், வெண்டைக்காய், காலிஃபிளவர் போன்ற காய்களுக்கு இந்த முறை மிகவும் ஏற்றது. ஊறவைத்த பிறகு, மீண்டும் நல்ல தண்ணீரில் கழுவ மறக்காதீர்கள்.
கீரையை நன்றாக கழுவ வேண்டும்
மார்க்கெட்டில் இருந்து காய்கறிகளை வாங்கியதும் தண்ணீரில் நன்றாகக் கழுவ வேண்டும். பலர் லேசாக கழுவி விடுகிறார்கள். ஆனால் அது போதாது. உங்கள் கைகளால் 2 முதல் 3 நிமிடங்கள் நன்றாகத் தேய்த்துக் கழுவ வேண்டும். அப்போதுதான் பூச்சிக்கொல்லி, தூசி, பாக்டீரியாக்கள் நீங்கும். கீரை வகைகளை சுத்தம் செய்யும்போது, ஒவ்வொரு இலையையும் தனியாகக் கழுவுவது ரொம்ப நல்லது.
வினிகர் கொண்டு சுத்தம் செய்தல்
வினிகர் ஒரு இயற்கையான சுத்திகரிப்பான். இது பாக்டீரியாக்களையும், ஓரளவிற்கு பூச்சிக்கொல்லிகளையும் அகற்ற உதவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து, அதில் 1முதல் 2 டீஸ்பூன் வினிகர் சேர்த்து, காய்கறிகளை 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். தக்காளி, வெள்ளரிக்காய் போன்ற வழுவழுப்பான காய்கறிகளுக்கு இந்த முறை சிறந்தது. அதிக வினிகர் பயன்படுத்த வேண்டாம், ஏனெனில் அது காய்கறியின் சுவையை மாற்றிவிடும்.
பேக்கிங் சோடா
பேக்கிங் சோடா பயன்படுத்துவது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட ஒரு முறை. ஒரு லிட்டர் தண்ணீரில் அரை டீஸ்பூன் பேக்கிங் சோடாவைக் கலந்து, அதில் காய்கறி, பழங்களை 10 முதல் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். பேக்கிங் சோடா, பூச்சிக்கொல்லிகளின் ரசாயன அமைப்பை உடைத்து, அவற்றின் வீரியத்தைக் குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆப்பிள், தக்காளி, குடைமிளகாய் போன்றவற்றுக்கு இந்த முறை மிகவும் பயனுள்ளது. பிறகு, அவற்றை சுத்தமான தண்ணீரில் நன்றாகக் கழுவுவது ரொம்ப அவசியம்.
தோல் சீவி சரியாக சமைத்தல்
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

