- Home
- Lifestyle
- Parenting Tips: மகள்களிடம் இந்த 5 விஷயங்களை ஒருபோதும் சொல்லாதீர்கள்.. உளவியல் சொல்வது என்ன?
Parenting Tips: மகள்களிடம் இந்த 5 விஷயங்களை ஒருபோதும் சொல்லாதீர்கள்.. உளவியல் சொல்வது என்ன?
Parenting Tips: மகள்களின் தன்னம்பிக்கையை பாதிக்கக்கூடிய 5 பொதுவான வார்த்தைகள் என்ன? பெற்றோர் தவிர்க்க வேண்டிய உரையாடல்கள் என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாம்.

மகள்களிடம் அம்மாக்கள் சொல்லக்கூடாத 5 விஷயங்கள்
ஒவ்வொரு மகளுக்கும் அவங்க அம்மாதான் முதல் குரு, முதல் தோழி. ஒரு மகள் தன்னைப்பற்றி எப்படி நினைக்க வேண்டும், இந்த சமூகத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை தன் தாயின் வார்த்தைகள் மூலமாகத்தான் கத்துக்கிறா. அதனால அம்மா சொல்ற ஒவ்வொரு வார்த்தையும் ரொம்ப முக்கியம். சில வார்த்தைகள் மகளின் மனதில் ஆழமான காயத்தை ஏற்படுத்திவிடும். அப்படி மகள்களிடம் தாய்மார்கள் சொல்லவே கூடாத 5 விஷயங்கள் என்னன்னு பார்ப்போம்.
நீ அழகா இல்லைன்னு சொல்றது
ஒரு பெண் தன் தோற்றத்தைப் பத்தி முதன்முதலா ஒரு கருத்தை உருவாக்குறதே குடும்பத்தினர் சொல்ற வார்த்தைகள்ல இருந்துதான். மத்த பொண்ணுங்களோட ஒப்பிடுறது, அழகை விமர்சனம் செய்றது அவளோட தன்னம்பிக்கையை குறைச்சிடும். அழகு என்பதை விட குணம், தன்னம்பிக்கைதான் முக்கியம்னு சின்ன வயசுல இருந்தே சொல்லிக் கொடுக்கணும். 'நீ ஸ்பெஷல்'னு ஒரு அம்மா தன் மகளுக்கு உணர்த்திட்டா, அவ வாழ்க்கையில எதையும் தைரியமா சந்திப்பா.
உன்னால எதுவும் முடியாதுன்னு சொல்றது
தேர்வுல மார்க் குறைஞ்சாலோ, ஏதேனும் வேலையில தோல்வி அடைஞ்சாலோ, அவளை மனசு தளர வைக்கிற மாதிரி பேசாதீங்க. ஊக்கப்படுத்துற மாதிரி பேசுங்க. 'மறுபடியும் முயற்சி பண்ணு, நான் உன்கூட இருக்கேன்'னு நீங்க சொல்ற வார்த்தை அவ வாழ்க்கையையே மாத்தலாம். ஒரு தாயோட நம்பிக்கைதான் மகளுக்கு மிகப்பெரிய பலம்.
வீட்டுக்கு வருமான வரி நோட்டீஸ் வந்தால் என்ன செய்ய வேண்டும்? வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு
சமூகம் என்ன சொல்லுமோன்னு யோசிக்க சொல்றது
'நாலு பேரு என்ன சொல்வாங்க'னு யோசிச்சு முடிவு எடுக்கச் சொல்லிக் கொடுக்காதீங்க. அப்படி வளர்ற பொண்ணுங்க, தங்களோட ஆசைகளை ஒதுக்கி வச்சுட்டு, மத்தவங்களை சந்தோஷப்படுத்தவே முயற்சி பண்ணுவாங்க. உங்க மகளுக்கு அவளோட முடிவுகளுக்கு மரியாதை கொடுக்கவும், சுயமரியாதையோட இருக்கவும் கத்துக்கொடுங்க. சமூகம் மாறிட்டே இருக்கும், ஆனா சுயமரியாதைதான் வாழ்க்கை முழுக்க கூட வரும்.
பொம்பள பிள்ளைகளுக்கு இது போதும்னு சொல்றது
படிப்பு, வேலை, பொருளாதாரம்னு எந்த விஷயத்திலயும் பெண் பிள்ளைகளுக்கு ஒரு எல்லையை நிர்ணயிக்காதீங்க. அது அவங்களோட வளர்ச்சியை தடுத்துடும். இன்னைக்கு பொண்ணுங்க எல்லா துறையிலயும் சாதிச்சுட்டு இருக்காங்க. மகளோட கனவுகளுக்கு தடையா இல்லாம, அதை அடையுறதுக்கு துணையா நிக்கிறதுதான் பெற்றோரோட கடமை. 'நீ நினைச்சதை சாதிக்க முடியும்'ங்கிற நம்பிக்கையை அம்மா கொடுக்கணும்.
கல்யாணம் பண்ணா எல்லாம் சரியாகிடும்னு சொல்றது
எல்லா பிரச்சினைக்கும் கல்யாணம்தான் தீர்வுனு உங்க மகளுக்கு சொல்லிக் கொடுக்காதீங்க. கல்யாணம் வாழ்க்கையோட ஒரு பகுதிதான், அதுவே முழு வாழ்க்கை இல்லை. முதல்ல அவளை தன் கால்ல நிக்கிறதுக்கும், பொருளாதார ரீதியா தைரியமா இருக்கவும் ஊக்கப்படுத்துங்க. தன்னிச்சையா முடிவெடுக்குற அளவுக்கு அவ வளர்ந்தாதான், எந்த உறவும் ஆரோக்கியமா இருக்கும். சுதந்திரமா வாழக் கத்துக்கிட்ட பொண்ணு எங்க இருந்தாலும் சந்தோஷமா இருப்பா.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

