- Home
- Lifestyle
- Fake Rice: உங்க அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலந்திருக்கா? கலப்படத்தை கண்டறிய 4 ஈஸி டிப்ஸ்.!
Fake Rice: உங்க அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலந்திருக்கா? கலப்படத்தை கண்டறிய 4 ஈஸி டிப்ஸ்.!
Real Rice vs Plastic Rice: நாம் தினசரி பயன்படுத்தும் பொருட்களில் கலப்படம் அதிகரித்துள்ளது. குறிப்பாக அரிசியில் பிளாஸ்டிக் கலக்கப்பட்டுள்ளது. கலப்பட அரிசியை கண்டுபிடிக்கும் 4 எளிய வழிமுறைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

Real Rice vs Plastic Rice
சமையலுக்குப் பயன்படுத்தும் அரிசியில் பிளாஸ்டிக் அல்லது செயற்கை அரிசி கலக்கப்பட்டிருக்கிறதா என்ற சந்தேகம் பலருக்கும் எழும். சந்தையில் விற்கப்படும் அரிசியின் தரத்தை உறுதி செய்யவும், அதில் ரசாயனம் அல்லது பிளாஸ்டிக் கலப்படம் உள்ளதா என்பதைக் கண்டறியவும் வீட்டிலேயே எளிதாகச் செய்யக்கூடிய 4 எளிய சோதனைகள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
தீ சோதனை
சிறிது அரிசியை எடுத்து ஒரு கரண்டியிலோ அல்லது பாத்திரத்திலோ வைத்து தீக்குச்சி அல்லது லைட்டர் மூலம் கொளுத்திப் பாருங்கள்.
உண்மையான அரிசியாக இருந்தால் அது கருகி சாம்பலாகி விடும். அதுமட்டுமன்றி தானியங்கள் எரியும் இயல்பான வாசனை வரும்.
பிளாஸ்டிக் அரிசியாக இருந்தால், பிளாஸ்டிக் உருகுவது போல சுருங்கி, கெட்ட நாற்றம் (பிளாஸ்டிக் எரியும் நெடி) வீசும். தீப்பிடித்து எரியும் போது பிளாஸ்டிக் உருகுவதைப் போல திரவமாகச் சொட்டும்.
நீர் சோதனை
ஒரு கண்ணாடி டம்ளரில் தண்ணீரை எடுத்துக் கொண்டு, அதில் ஒரு கைப்பிடி அளவு பச்சரிசியைப் போட்டு நன்றாகக் கலக்குங்கள்.
உண்மையான அரிசியின் அடர்த்தி அதிகம் என்பதால் தண்ணீரின் அடியில் மூழ்கிவிடும்.
பிளாஸ்டிக் அரிசியின் அடர்த்தி குறைவாக இருப்பதோடு, எடை குறைவாக இருப்பதால் தண்ணீரின் மேல் மிதக்கும்.
சூடான எண்ணெய் சோதனை
ஒரு வாணலியில் சிறிதளவு சமையல் எண்ணெயை ஊற்றி, அது நன்றாகச் சூடானதும் சில அரிசிகளை அதில் போடுங்கள்.
உண்மையான அரிசியாக இருந்தால் அது எண்ணெயில் பொரிந்து பொரி போல மாறும்.
பிளாஸ்டிக் அரிசி யாக இருந்தால் அது அதிக வெப்பத்தில் உருகி, வாணலியின் அடியில் ஒரு பிசுபிசுப்பான பிளாஸ்டிக் படலமாக ஒட்டிக்கொள்ளும்.
பூஞ்சை அல்லது அழுகல் சோதனை
கொஞ்சம் அரிசியைச் சாதமாக வேகவைத்து, அதை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு மூடி 3 முதல் 4 நாட்கள் அப்படியே வைத்துவிடுங்கள்.
உண்மையான அரிசி, இயற்கை தானியம் என்பதால் 2 அல்லது 3 நாட்களிலேயே பாக்டீரியா மற்றும் பூஞ்சை பிடித்து அழுகத் தொடங்கும்.
பிளாஸ்டிக் அரிசி, எத்தனை நாட்கள் வைத்திருந்தாலும் அழுகாமல், பூஞ்சை பிடிக்காமல், சமைத்த அன்றைய தினத்தில் இருந்தது போலவே அப்படியே இருக்கும்.
பிற குறிப்புகள்
சாதம் வடித்த பின் சோதித்தல்: சாதம் வடித்த தண்ணீரை (கஞ்சி) ஒரு பாத்திரத்தில் ஊற்றி சில மணிநேரம் ஆறவிட்டால், பிளாஸ்டிக் அரிசியாக இருந்தால் அதன் மேல் பகுதியில் ஒரு பிளாஸ்டிக் போன்ற தடிமனான படலம் உருவாகும்.
உருட்டும் சோதனை: சாதத்தைச் கையில் எடுத்துப் பிசைந்து உருண்டையாக உருட்டி தரையில் அடித்தால், உண்மையான சாதம் உடைந்து சிதறும். பிளாஸ்டிக் அரிசி சாதம் ரப்பர் பந்து போல எழும்பும்.
உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (FSSAI) வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, எப்போதும் சான்றிதழ் பெற்ற நம்பகமான கடைகளில் அரிசியை வாங்கிப் பயன்படுத்துவது உடலாரோக்கியத்திற்குப் பாதுகாப்பானது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

