MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Chanakya Niti: எவ்வளவு சம்பாதிச்சாலும் காசு கையில நிக்கலையா? இந்த 4 பழக்கத்தை உடனே மாத்துங்க!

Chanakya Niti: எவ்வளவு சம்பாதிச்சாலும் காசு கையில நிக்கலையா? இந்த 4 பழக்கத்தை உடனே மாத்துங்க!

Chanakya Niti: எவ்வளவு சம்பாதித்தாலும் மாதக் கடைசியில் கையில் காசு தங்கவில்லையா? நாம் அறியாமலேயே செய்யும் சில தவறுகள்தான் நமது நிதிநிலையை மோசமாக்குகின்றன. சாணக்கியரின் அவை என்னென்ன என்று பார்ப்போம்.

2 Min read
Author : Rayar A
Published : Aug 29 2026, 07:53 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
பணம் கையில் தங்காமல் இருக்க என்னென்ன காரணம்?
Image Credit : AI

பணம் கையில் தங்காமல் இருக்க என்னென்ன காரணம்?

பணம் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் சம்பாதித்த பணத்தை நம்மிடம் தக்கவைத்துக் கொள்வது. சிலர் எவ்வளவு சம்பாதித்தாலும் மாத இறுதியில் கையில் ஒரு ரூபாய்கூட மிஞ்சாது. ஆனால், ஆச்சார்ய சாணக்கியர் சொல்வது போல, சில பழக்கங்கள் இருந்தால் பணம் கையில் தங்காது. அது என்னவென்று இங்கே தெரிந்துகொள்ளலாம்.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
ஆடம்பரமாக செலவு செய்யும் பழக்கம்
Image Credit : Asianet News

ஆடம்பரமாக செலவு செய்யும் பழக்கம்

சாணக்கிய நீதிப்படி, பணத்தின் அருமை தெரியாமல் கண்டபடி செலவு செய்வது, செல்வத்தை மெதுவாகக் கரைத்துவிடும். தேவை இருக்கிறதோ இல்லையோ, கண்ணில் பட்டதை எல்லாம் வாங்குவது, மற்றவர்களைப் பார்த்து நாமும் செலவு செய்ய நினைப்பது போன்றவை கடைசியில் பெரிய நிதிச் சிக்கலில் கொண்டுபோய் விடும். வருமானம் அதிகரிக்கும்போது வாழ்க்கை முறையையும் அதே அளவுக்கு உயர்த்தினால், சேமிப்புக்கு வாய்ப்பே இருக்காது.

Related Articles

Related image1
Chanakya Niti: இந்த 4 விஷயங்களுக்குப் பிறகு கண்டிப்பா குளிக்கணும்! சாணக்கியர் சொல்லும் அட்வைஸ்
Related image2
Chanakya Niti: உங்க ரகசியங்களை 'இந்த' 4 நபர்களிடம் மட்டும் சொல்லவே சொல்லாதீங்க!
36
வருமானத்திற்கு மீறி செலவு செய்வது
Image Credit : Getty

வருமானத்திற்கு மீறி செலவு செய்வது

தேவையில்லாத பொருட்களை வாங்க கிரெடிட் கார்டு, பர்சனல் லோன் போன்ற கடன்களை அடிக்கடி பயன்படுத்தினால், உங்கள் எதிர்கால வருமானத்தின் ஒரு பகுதி முன்கூட்டியே செலவாகிவிடும். வீடு, கல்வி, தொழில் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு கடன் வாங்குவது தவறல்ல. ஆனால், ஆடம்பர வாழ்க்கைக்காக கடன் வாங்கிவிட்டு, அதைத் திருப்பிச் செலுத்தும் திறனை யோசிக்காவிட்டால் நிதிச் சிக்கல்கள் அதிகரிக்கும் என சாணக்கிய நீதி கூறுகிறது.
46
மற்றவர்களைப் பார்த்து நிதி முடிவுகளை எடுப்பது
Image Credit : Gogle Gemini

மற்றவர்களைப் பார்த்து நிதி முடிவுகளை எடுப்பது

பக்கத்து வீட்டுக்காரர் கார் வாங்கிவிட்டார், நண்பர்கள் விலை உயர்ந்த போன் வைத்திருக்கிறார்கள், உறவினர்கள் ஆடம்பரமாக வாழ்கிறார்கள் என்று நாமும் அப்படியே வாழ நினைப்பது நிதி அழுத்தத்தை ஏற்படுத்தும். சாணக்கியர், மற்றவர்களின் வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதை விட, நமது தகுதி மற்றும் சூழ்நிலைகளைப் புரிந்துகொண்டு முடிவெடுக்க வேண்டும் என்று போதித்துள்ளார். நமது வருமானம், பொறுப்புகளை யோசிக்காமல் மற்றவர்களைப் பின்பற்றினால், சம்பாதித்த பணம் கையில் நிற்காது.
56
சேமிப்பில் கவனம் செலுத்தாமல் இருப்பது
Image Credit : Chatgpt

சேமிப்பில் கவனம் செலுத்தாமல் இருப்பது

“இந்த மாதச் செலவுகள் முடிந்த பிறகு மீதமுள்ள பணத்தைச் சேமிப்பேன்” என்று நினைப்பது பலரிடம் உள்ள பொதுவான பழக்கம். ஆனால் இப்படிச் செய்தால், பெரும்பாலான நேரங்களில் மாத இறுதியில் சேமிக்க எதுவும் மிஞ்சாது. சாணக்கிய நீதியின்படி, வருமானம் வந்தவுடனேயே ஒரு குறிப்பிட்ட தொகையை சேமிப்புக்கு ஒதுக்கிவிட்டு, மீதமுள்ள பணத்தில் செலவுகளைச் சமாளிப்பதே சிறந்த பழக்கம்.
66
சாணக்கிய நீதி
Image Credit : Gemini

சாணக்கிய நீதி

சுருக்கமாகச் சொன்னால், மேலே உள்ள நான்கு விஷயங்களையும் சரியாகப் புரிந்துகொண்டு வாழ்க்கையில் கடைப்பிடித்தால், நிச்சயமாக ஒரு நல்ல நிதி ஒழுக்கத்தை உருவாக்கிக்கொள்ள முடியும். நீங்க என்ன நினைக்கிறீங்க?

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
சாணக்கிய நீதி
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Cold Water: கூல் வாட்டர் குடிச்சா சளி பிடிக்குமா? டாக்டர்ஸ் சொல்ற இந்த உண்மையை தெரிஞ்சிக்கோங்க!
Recommended image2
Sleep Regularity: 8 மணி நேரம் தூங்கியும் சோர்வா? தூக்க நேரத்தின் சீர்மைதான் முக்கிய காரணமா?
Recommended image3
சாப்பாட்டுல தினமும் கிராம்பு சேர்த்தா இவ்ளோ நன்மைகளா.!
Related Stories
Recommended image1
Chanakya Niti: இந்த 4 விஷயங்களுக்குப் பிறகு கண்டிப்பா குளிக்கணும்! சாணக்கியர் சொல்லும் அட்வைஸ்
Recommended image2
Chanakya Niti: உங்க ரகசியங்களை 'இந்த' 4 நபர்களிடம் மட்டும் சொல்லவே சொல்லாதீங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved