MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • மீண்டும் மேகவெடிப்பு! உத்தராகண்ட் கிராமத்தில் வீடுகளை சூறையாடிய வெள்ளம்!

மீண்டும் மேகவெடிப்பு! உத்தராகண்ட் கிராமத்தில் வீடுகளை சூறையாடிய வெள்ளம்!

உத்தரகண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவால் பலர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. பல கிராமங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

1 Min read
SG Balan
Published : Aug 06 2025, 04:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
மேகவெடிப்பு, வெள்ளப் பெருக்கு
Image Credit : twitter

மேகவெடிப்பு, வெள்ளப் பெருக்கு

வட மாநிலங்களான உத்தரகண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவு காரணமாக பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தத் துயர சம்பவங்களில் பலர் உயிரிழந்த நிலையில், மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

உத்தரகண்ட் மாநிலத்தின் பௌரி கார்வால் மாவட்டத்தில் உள்ள சைன்ஜி கிராமத்தில் இன்று (ஆகஸ்ட் 6, 2025) அதிகாலையில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் மேக வெடிப்பு காரணமாக பல வீடுகள் சேதமடைந்தன.

அதே மாவட்டத்தில் உள்ள தைலிசைன் வட்டாரத்தின் பன்குரா கிராமத்தில் காலை 10.30 மணியளவில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், சில நேபாள தொழிலாளர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

23
உத்தராகண்ட் கிராமம்
Image Credit : Getty

உத்தராகண்ட் கிராமம்

பௌரி கார்வால் மாவட்டத்தின் பூராசி கிராமத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பால் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். பிம்லா தேவி மற்றும் ஆஷா தேவி என அடையாளம் காணப்பட்ட இவர்கள், இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர். மேலும், ஒரு வீடு மற்றும் ஒரு மாட்டு தொழுவமும் மண்ணில் புதைந்தன.

நேற்று உத்தரகாசியில் ஏற்பட்ட மேக வெடிப்பால் தாராலி கிராமத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதுவரை, இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்திய ராணுவம், இந்தோ-திபெத்திய எல்லை காவல் படை (ITBP), தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) ஆகியவற்றின் ஒருங்கிணைந்த மீட்புப் பணிகளில் இதுவரை 130 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Related image1
மேக வெடிப்பு... உத்தரகாசியில் கண் இமைக்கும் நேரத்தில் கிராமத்தையே விழுங்கிச் சென்ற வெள்ளம்!
Related image2
Now Playing
Watch | ஹிமாச்சலில் மேக வெடிப்பு! - இடிந்து விழுந்து ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட கட்டிடம்!
33
இமாச்சலப் பிரதேசத்தில்
Image Credit : Getty

இமாச்சலப் பிரதேசத்தில்

மற்றொரு மலைப்பிரதேச மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தின் கின்னௌர் மாவட்டத்தில் இன்று மேக வெடிப்பு ஏற்பட்டது. இதனால் அந்த மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக ஏற்படும் இதுபோன்ற இயற்கை சீற்றங்களால், பல சாலைகள் துண்டிக்கப்பட்டு, இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
இந்தியா
வெள்ளம்
மழை செய்திகள்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved