- Home
- இந்தியா
- மேக வெடிப்பு... உத்தரகாசியில் கண் இமைக்கும் நேரத்தில் கிராமத்தையே விழுங்கிச் சென்ற வெள்ளம்!
மேக வெடிப்பு... உத்தரகாசியில் கண் இமைக்கும் நேரத்தில் கிராமத்தையே விழுங்கிச் சென்ற வெள்ளம்!
உத்தரகாசி மாவட்டத்தில் கங்கணா நதியின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்ட மேக வெடிப்பால் தராலி கிராமத்தில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. வீடுகள், கடைகள், சாலைகள் எனப் பலவும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

உத்தரகாசியில் மேகவெடிப்பு
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள கங்கணா நதியின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக, தராலி கிராமத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கங்கோத்ரி தாம் செல்லும் வழியில் உள்ள இந்த கிராமத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்டுள்ளது.
ஹர்சில் பகுதியில் உள்ள கங்கணா ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்ததால், தராலி கிராமத்தில் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF), ராணுவம் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
BREAKING: Dehradun: Massive flood in the Khir Ganga river in Uttarkashi. Water carrying silt cascades into Tharali village. Many feared trapped. Disaster teams rushed. pic.twitter.com/wtXVrqYBzL
— Rahul Shivshankar (@RShivshankar) August 5, 2025
வெள்ளத்தில் அழிந்த கட்டிடங்கள்
வெள்ளத்தால் ஏற்பட்ட அழிவைக் காட்டும் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் வெளியாகி உள்ளன. வெள்ள நீர் வீடுகள், கடைகள் மற்றும் சாலைகளை அடித்துச் சென்று, பல சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.
சில ஹோட்டல்கள் மற்றும் தங்குமிடங்கள் வெள்ளத்தில் முற்றிலும் அழிந்துவிட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பல தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என உள்ளூர் மக்கள் அச்சப்படுகின்றனர்.
#uttarkashi#cloudburstpic.twitter.com/XFwFCminTj
— YASH (@YASH57973388) August 5, 2025
வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
இத்துடன், பர்கோட் தாலுகாவின் பனாலா பட்டி பகுதியில், குட் கதெரா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சுமார் 18 ஆடுகள் அடித்துச் செல்லப்பட்டன.
இந்திய வானிலை ஆய்வு மையம், உத்தரகண்ட் மாநிலத்தில் ஆகஸ்ட் 10 வரை தொடர்ந்து கனமழை பெய்யும் என எச்சரித்துள்ளது. குறிப்பாக மலைப் பகுதிகளில் பலத்த மழை எதிர்பார்க்கப்படுகிறது. ஹர்சில் மற்றும் பட்வாரியிலிருந்து மீட்புக் குழுக்கள் விரைந்துள்ளன. சிக்கியிருப்பவர்களைக் கண்டுபிடித்து வெளியேற்றும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.