MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • இந்தியாவில் ராய்ட்டர்ஸ் எக்ஸ் கணக்கு திடீர் முடக்கம்! விளக்கம் கோரும் அரசு!

இந்தியாவில் ராய்ட்டர்ஸ் எக்ஸ் கணக்கு திடீர் முடக்கம்! விளக்கம் கோரும் அரசு!

சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸின் எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. இது 'ஆபரேஷன் சிந்தூர்' தொடர்பான சட்டப்பூர்வ கோரிக்கையின் பேரில் நடந்ததாக எக்ஸ் தெரிவிக்க, இந்திய அரசு புதிய கோரிக்கை எதுவும் விடுக்கவில்லை என்கிறது.

1 Min read
SG Balan
Published : Jul 06 2025, 01:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
ராய்ட்டர்ஸ் கணக்கு முடக்கம்
Image Credit : Getty

ராய்ட்டர்ஸ் கணக்கு முடக்கம்

சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸின் எக்ஸ் (X) சமூக வலைத்தளக் கணக்கு இந்தியாவில் "சட்டப்பூர்வ கோரிக்கைக்கு இணங்க" முடக்கப்பட்டுள்ளதாக சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை 'ஆபரேஷன் சிந்தூர்' நடைபெற்ற காலத்தில் செய்யப்பட்ட ஒரு கோரிக்கைக்குப் பதிலளிக்கும் வகையில் எடுக்கப்பட்டதாக எக்ஸ் தளம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், இந்திய அரசு தரப்பில் எந்த புதிய கோரிக்கையும் விடுக்கப்படவில்லை என்றும், கணக்கை முடக்கியது தொடர்பாக எக்ஸ் நிறுவனத்திடம் விளக்கம் கோரப்பட்டுள்ளதாகவும் பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

23
இந்திய அரசின் நிலைப்பாடு
Image Credit : Google

இந்திய அரசின் நிலைப்பாடு

"மே 7 அன்று (ஆபரேஷன் சிந்தூர் காலத்தில்) கணக்கை முடக்குவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அது அப்போது அமல்படுத்தப்படவில்லை. இப்போது எக்ஸ் நிறுவனம் அந்த உத்தரவை அமல்படுத்தியுள்ளது, இது அவர்களின் தவறு. இதை விரைவில் சரிசெய்யுமாறு இந்திய அரசு எக்ஸ் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டுள்ளது," என்று அரசு வட்டாரங்கள் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளன.

ராய்ட்டர்ஸின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கு மற்றும் 'ராய்ட்டர்ஸ் வேர்ல்ட்' (Reuters World) ஆகிய இரு கணக்குகளும் இந்தியாவில் அணுக முடியாத நிலையில் உள்ளன. ஆனால், 'ராய்ட்டர்ஸ் டெக் நியூஸ்' (Reuters Tech News), 'ராய்ட்டர்ஸ் ஃபேக்ட் செக்' (Reuters Fact Check), 'ராய்ட்டர்ஸ் ஆசியா' (Reuters Asia) மற்றும் 'ராய்ட்டர்ஸ் சீனா' (Reuters China) போன்ற ராய்ட்டர்ஸின் துணை X கணக்குகளை இந்தியாவில் தொடர்ந்து பார்வையிட முடிகிறது.

Related Articles

Related image1
புதிய கட்சி தொடங்கிய எலான் மஸ்க்: டிரம்ப்புக்கு சவால் விடும் 'அமெரிக்கா கட்சி'
Related image2
Now Playing
காசாவில் போர் நிறுத்த வேண்டும்.....தேதியை குறித்த டிரம்ப் ! சொன்னபடி நடக்குமா?
33
எக்ஸ் நிறுவனத்தின் விளக்கம்
Image Credit : Asianet News

எக்ஸ் நிறுவனத்தின் விளக்கம்

முடக்கப்பட்டுள்ள ராய்ட்டர்ஸின் முக்கிய கணக்கை அணுக முயற்சிக்கும் பயனர்களுக்கு, "@Reuters கணக்கு முடக்கப்பட்டுள்ளது. சட்டப்பூர்வ கோரிக்கைக்கு இணங்க இந்தியாவில் மட்டும் முடக்கப்பட்டிருக்கிறது" (Account withheld. @Reuters has been withheld in IN in response to a legal demand.) என்ற செய்தி காட்டப்படுகிறது.

சட்டப்பூர்வ கோரிக்கை, நீதிமன்ற உத்தரவு அல்லது உள்ளூர் சட்டங்களுக்கு இணங்கவே ஒரு குறிப்பிட்ட கணக்கு அல்லது பதிவுகளை முடக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று எக்ஸ் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இந்த திடீர் நடவடிக்கை, சமூக வலைத்தள கட்டுப்பாடுகள் குறித்த விவாதங்களை மீண்டும் கிளப்பியுள்ளது.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
இந்தியா
Elon Musk
ஆபரேஷன் சிந்தூர்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved