MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • தண்ணி கூட கொடுக்கல... இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் தேவையா? ஓவைசி ஆவேசம்

தண்ணி கூட கொடுக்கல... இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் தேவையா? ஓவைசி ஆவேசம்

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பின்னணியில், இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் குறித்து ஓவைசி கேள்வி எழுப்பியுள்ளார். பயங்கரவாதம் இருக்கும்போது கிரிக்கெட் விளையாடுவது ஏன் என அவர் அரசை விமர்சித்துள்ளார்.

1 Min read
Author : SG Balan
Published : Jul 29 2025, 08:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட்
Image Credit : ANI

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட்

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இச்சூழலில், பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவது ஏன் என ஏ.ஐ.எம்.ஐ.எம். (AIMIM) கட்சித் தலைவரும் மக்களவை எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி கேள்விகளை எழுப்பியுள்ளார்.

24
பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை
Image Credit : stockphoto

பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை

பயங்கரவாதமும் அண்டை நாட்டுடன் நல்லுறவும் ஒருசேர இருக்க முடியாது என்பதே தற்போது இந்தியாவின் நிலைப்பாடு என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மக்களவையில் திங்கள்கிழமை விளக்கமளித்தார். பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால், பயங்கரவாதம் குறித்து மட்டுமே பேசப்படும் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

Related Articles

Related image1
மோடிக்கு தைரியம் இருந்தா... இந்த ஒரு வார்த்தையைச் சொல்லட்டும்! ராகுல் காந்தி சவால்!
Related image2
இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் 3 இருக்கு! ஆசியக் கோப்பை அட்டவணை இதோ!
34
மக்களைவையில் ஓவைசி
Image Credit : Getty

மக்களைவையில் ஓவைசி

இந்த நிலையில், மக்களவையில் பேசிய ஓவைசி, செப்டம்பரில் தொடங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவும் பாகிஸ்தானும் விளையாடுவதற்கு மத்திய அரசு தடை விதிக்காததைக் கடுமையாகக் கண்டித்தார்.

44
கிரிக்கெட் மட்டும் தேவையா?
Image Credit : AFP

கிரிக்கெட் மட்டும் தேவையா?

ஓவைசி பேசுகையில், "பாகிஸ்தானுடன் வர்த்தகம் நிறுத்தப்பட்டுள்ளது; அந்நாட்டுக்கு இங்கிருந்து தண்ணீர் திறந்துவிடப்படுவதும் நிறுத்தப்பட்டுள்ளது; ஆனால், அவர்களுடன் கிரிக்கெட் மட்டும் எப்படி விளையாட வேண்டுமா? இதற்கு யார் பொறுப்பு? பாகிஸ்தான் ராணுவமும் ஐ.எஸ்.ஐ.யும் இந்தியாவை வலு இழக்கச் செய்ய விரும்புகின்றன" என்று அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசின் இந்த இரட்டை நிலைப்பாடு குறித்து அவர் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
இந்தியா
பாகிஸ்தான்

Latest Videos
Recommended Stories
Recommended image1
காங்கிரசில் 7 கோடிக்கு சீட் விற்பனை? ராகுல், பிரியங்கா மீது பாஜக பகீர் குற்றச்சாட்டு!
Recommended image2
இந்தியாவில் காமெனி பெயர் கொண்ட சாலை எங்கே இருக்கு தெரியுமா? வரலாறு முக்கியம் அமைச்சரே
Recommended image3
தாலி கட்டின புருஷன் வேணாம்.. கள்ளக்காதலன் தான் வேணும்.. அடம்பிடித்த மனைவி.. காலையில் காத்திருந்த அதிர்ச்சி
Related Stories
Recommended image1
மோடிக்கு தைரியம் இருந்தா... இந்த ஒரு வார்த்தையைச் சொல்லட்டும்! ராகுல் காந்தி சவால்!
Recommended image2
இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் 3 இருக்கு! ஆசியக் கோப்பை அட்டவணை இதோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved