MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை தாக்க எதிர்க்கட்சிகள் திட்டம்.. பகீர் கிளப்பிய சபாநாயகர்.. என்ன நடந்தது?

நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை தாக்க எதிர்க்கட்சிகள் திட்டம்.. பகீர் கிளப்பிய சபாநாயகர்.. என்ன நடந்தது?

நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை தாக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு இருந்ததாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார். தமிழக பெண் எம்.பி.க்கள் ஜோதிமணி, சுதா மீது குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.

2 Min read
Author : Rayar r
| Updated : Feb 05 2026, 03:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
பிரதமர் மோடியை தாக்க எதிர்க்கட்சிகள் திட்டம்
Image Credit : ANI

பிரதமர் மோடியை தாக்க எதிர்க்கட்சிகள் திட்டம்

நாடாளுமன்ற மக்களவையில் பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பகீர் குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளார். 

குடியரசுத் தலைவர் தீர்மானத்தின் மீதான பதிலுரையை பிரதமர் மோடி நேற்று (பிப்ரவரி 4) வழங்க இருந்தார். இது தொடர்பாக மக்களவையில் அவர் பேசவிருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் பிரதமர் உரையாற்றவில்லை எனக்கூறி மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

24
ஜோதிமணி, சுதா மீது சபாநாயகர் பகீர் குற்றச்சாட்டு
Image Credit : Google

ஜோதிமணி, சுதா மீது சபாநாயகர் பகீர் குற்றச்சாட்டு

இந்த நிலையில் தான் ''நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை தாக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டனர். அதனால் அவரை நான் தான் நாடாளுமன்றத்துக்கு வர வேண்டாம் என்று கூறியிருந்தேன்'' என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். 

தமிழக காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் ஜோதிமணி, சுதா ஆகியோர் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு சம்பவத்தை பிரதமருக்கு எதிராக திட்டமிட்டு இருந்ததாகவும் ஓம்பிர்லா குற்றம்சாட்டியிருக்கிறார்.

Related Articles

Related image1
இந்தியா மீதான வரியை 18% ஆக குறைத்த டிரம்ப்.. நண்பேன்டா.. பிரதமர் மோடி நன்றி!
Related image2
எல்லையில் சீனா ஆக்கிரமிப்பு.. ராகுல் காந்தி பேச்சு.. கொந்தளித்த அமித்ஷா, ராஜ்நாத் சிங்.. பரபரப்பு!
34
ஓம் பிர்லா பேசியது என்ன?
Image Credit : ANI

ஓம் பிர்லா பேசியது என்ன?

இது தொடர்பாக பேசிய ஓம் பிர்லா ''நேற்று அவையில் என்ன நடந்தது என்பதை நாடு பார்த்தது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையில் பிரதமர் இருக்கையை நோக்கி எப்படிச் சென்றார்கள் என்பதையும் அனைவரும் பார்த்தனர். 

ஏதேனும் அசம்பாவிதம் நடந்திருக்கக்கூடும் என்ற தகவல் எனக்குக் கிடைத்தது. இதுபோன்ற ஒரு சூழ்நிலை மீண்டும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, பிரதமர் மோடியை இன்று அவைக்கு வர வேண்டாம் என்று நான் தெரிவித்தேன்'' என்று கூறினார்.

44
நாடாளுமன்றத்தில் என்ன நடந்தது?
Image Credit : ANI

நாடாளுமன்றத்தில் என்ன நடந்தது?

நாடாளுமன்றத்தில் கடந்த ஒரு வாரமாக குடியரசுத் தலைவர் உரையின் மீதான விவாதம் நடந்து வருகிறது. இதற்கிடையே மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பியுமான ராகுல் காந்தி சீனா இந்தியா நிலப்பகுதியை ஆக்கிரமித்து விட்டதாக குற்ற‌சாட்டினார். 

இதற்கு பாஜக எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ராகுல் காந்தியை பேச விடாமல் தடுப்பதாக காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் ஜோதிமணி, சுதா ஆகியோர் பிரதமர் மோடி இருக்கையை சூழ்ந்து கொண்டு கோஷங்களை எழுப்பினார்கள். 

அப்போது பிரதமர் இல்லை. பிரதமர் மோடி நேற்று மாலை 5 மணிக்கு உரையாற்றுவதாக இருந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் சதியை முன்கூட்டியே அறிந்து பிரதமரை வர வேண்டாம் என சபாநாயகர் மற்றும் பாஜக எம்.பி.க்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
பிரதமர் மோடி
பாராளுமன்றம்
இந்தியா
இந்திய தேசிய காங்கிரஸ்
பிஜேபி

Latest Videos
Recommended Stories
Recommended image1
விவசாயிகளுக்கு அரசு முக்கிய எச்சரிக்கை.. தமிழ்நாடும் லிஸ்டில் இருக்கு.. உடனே இதை பண்ணுங்க
Recommended image2
பாஜக கூட்டணி அரசுக்கு பேரிடி.. பீகாரில் மீண்டும் சட்டமன்றத் தேர்தல்..? பிராசாந்த் கிஷோர் வைத்த ஆப்பு..!
Recommended image3
ஓலா, உபர், ரேபிடோ இன்றே கடைய சாத்த வேண்டியது தான்.. 30% கம்மி வாடகையில் அறிமுகமாகிறது Bharat Taxi
Related Stories
Recommended image1
இந்தியா மீதான வரியை 18% ஆக குறைத்த டிரம்ப்.. நண்பேன்டா.. பிரதமர் மோடி நன்றி!
Recommended image2
எல்லையில் சீனா ஆக்கிரமிப்பு.. ராகுல் காந்தி பேச்சு.. கொந்தளித்த அமித்ஷா, ராஜ்நாத் சிங்.. பரபரப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved