- Home
- இந்தியா
- Train Ticket Refund: ரயிலில் தூங்கி ஸ்டேஷனை மிஸ் பண்ணிட்டீங்களா? டிக்கெட் பணம் திரும்ப கிடைக்குமா?
Train Ticket Refund: ரயிலில் தூங்கி ஸ்டேஷனை மிஸ் பண்ணிட்டீங்களா? டிக்கெட் பணம் திரும்ப கிடைக்குமா?
Train Ticket Refund: ரயில் பயணத்தின்போது தூங்கிவிட்டு இறங்க வேண்டிய நிலையத்தை தவறவிடுவது பலருக்கும் நேரும் அனுபவம். அப்படிப்பட்ட சூழலில் என்ன செய்ய வேண்டும்? என்பது பலருக்கும் தெரிவதில்லை. இதுகுறித்த ரயில்வே விதிகளை காண்போம்.

ரயில் நிலையத்தைத் தவறவிடுதல் தொடர்பான விதிகள்
லோக்கல் டிரெயினா இருந்தாலும் சரி, வே ; வெளியூர் செல்லும் ரயிலா இருந்தாலும் சரி, அந்த ஆட்டத்துல பலருக்கும் தூக்கம் வந்துடும். ஆனா, தூக்கத்துல இறங்க வேண்டிய ஸ்டேஷனை தவறவிட்டா பயணிகளுக்கு சிக்கல்தான். இனிமே டிக்கெட் பணம் திரும்ப கிடைக்குறத பத்தி கவலைப்பட வேண்டாம். தூக்கத்தினால ஸ்டேஷனை தவறவிட்டா, திரும்பவும் அந்த ஸ்டேஷனுக்குப் போக புது டிக்கெட் எடுக்கணும். புது டிக்கெட் இல்லாம பயணம் செஞ்சா, அபராதம் கட்ட நேரிடும். இந்த விதிமுறை மூலமா உங்க பண நஷ்டத்தை ஓரளவுக்கு ஈடுகட்டலாம்.
ரயில் டிக்கெட் கட்டணத் திரும்பப் பெறுதல்
சூழ்நிலையை புரிஞ்சுகிட்டு பதட்டப்படாம, அடுத்த ஸ்டேஷன் வரைக்கும் காத்திருங்க. அப்புறம் TTE-கிட்ட முழு விஷயத்தையும் சொன்னா, அவரே சரியான வழிகாட்டுவார். ஒருவேளை TTE இல்லைன்னா, ரயில்வே ஆப் உதவியை நாடலாம். இல்லைனா, ரயில்வே ஹெல்ப்லைன் நம்பர் 139-க்கு போன் பண்ணலாம். அடுத்த ஸ்டேஷன்ல இருக்குற டிக்கெட் கவுன்ட்டர்லயும் உங்க பிரச்சினையை சொல்லலாம்.
இனி 3 நிமிடத்தில் ரயில் தட்கல் டிக்கெட் உறுதி! IRCTC-யின் புதிய அதிரடி அப்டேட்!
டிக்கெட் ரீஃபண்ட்
ஆனா, இதுக்கு நேர்மாறான சூழலும் நடக்கலாம். ரயில் பாதை மாற்றம் அல்லது ரயில்வேயின் வேறு ஏதாவது காரணத்தால நீங்க ஸ்டேஷனை தவறவிட்டா, 'டிக்கெட் டெபாசிட் ரசீது' (Ticket Deposit Receipt) மூலமா பணத்தைத் திரும்பக் கேட்டு விண்ணப்பிக்கலாம்.
குறிப்பிட்ட காலக்கெடு
ஆனா, இந்த விண்ணப்பத்தை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள்ள சமர்ப்பிக்கணும். இல்லைன்னா, அது செல்லுபடியாகாது. சரியான நேரத்துல விண்ணப்பிக்கலைன்னா, உங்களுக்குப் பணம் திரும்பக் கிடைக்காது.

