MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • மனைவியை கழற்றிவிட்டு கொழுந்தியாளுடன் எஸ்கேப்! மாமாவை பழிவாங்க மச்சான் செய்த வேலையை பாருங்கள்!

மனைவியை கழற்றிவிட்டு கொழுந்தியாளுடன் எஸ்கேப்! மாமாவை பழிவாங்க மச்சான் செய்த வேலையை பாருங்கள்!

உத்தரபிரதேசத்தில், அக்கா கணவருடன் தங்கை வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதற்கு பழிவாங்கும் நோக்கில், அந்த பெண்ணின் தம்பி, அக்கா கணவரின் தங்கையை அழைத்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார். 

1 Min read
vinoth kumar
Published : Sep 18 2025, 12:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
கொழுந்தியாளுடன் காதல்
Image Credit : stockPhoto

கொழுந்தியாளுடன் காதல்

உத்தரபிரதேசத்தில் பரேலி மாவட்டம் கமலுபீர் கிராமத்தை சேர்ந்தவர் கேசவ் குமார் (28). இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். அதே பகுதியைணு சேர்ந்த மாமியார் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது அவருக்கும் அவருடைய கொழுந்தியாள் அதாவது மனைவியின் தங்கை கல்பனாவுக்கும் (19) பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது.

24
கள்ளக்காதல்
Image Credit : Asianet News

கள்ளக்காதல்

இவர்களது விவகாரம் இரு குடும்பத்தினருக்கும் தெரியவந்ததை அடுத்து கண்டித்துள்ளார். ஆனால் இருவரும் பழகி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் 23ம் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். அக்கா கணவர் இப்படி செய்து குடும்பத்தை அவமானப்படுத்தி விட்டதால் மைத்துனர் ரவீந்திரன் (22) கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

Related Articles

Related image1
தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன மாதிரியே நடக்கப்போகுது! 20 மாவட்டங்களில் விடாமல் அடிக்கப்போகுதாம் மழை- எந்தெந்த இடங்கள்.?
Related image2
கார் பேனட்டில் வாலிபரை அடித்து தூக்கி இழுத்து சென்ற SI! காப்பாத்துங்க காப்பாத்துங்க அலறி கூச்சல்! வைரலான வீடியோவால் ஆப்பு!
34
 கேசவ் குமார் குடும்பத்தினர் அதிர்ச்சி
Image Credit : Google

கேசவ் குமார் குடும்பத்தினர் அதிர்ச்சி

எனவே அக்காள் கணவரை பழிவாங்க அவரது குடும்பத்தையும் அசிங்கப்படுத்த வேண்டும் என ரவீந்திரன் திட்டமிட்டார். அவர் ஏற்கனவே கேசவ் குமாரின் 19 வயது தங்கையை காதலித்து வந்துள்ளார். அக்காள் கணவரை பழிவாங்க, அன்று மறுநாளே அவரது தங்கையை அழைத்துக்கொண்டு ரவீந்திரன் ஓட்டம் பிடித்தார். இதனால் கேசவ் குமார் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

44
காவல் நிலையத்தில் புகார்
Image Credit : our own

காவல் நிலையத்தில் புகார்

இதுகுறித்து இரு குடும்பத்தினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து இரு ஜோடிகளையும் தீவிரமாக தேடி வந்தனர். ஒரே வழியாக 4 பேரையும் கண்டுபிடித்தனர். பின்னர் அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்தனர். இதையடுத்து இரு குடும்பத்தினரையும் வரவழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அவர்களை இரு குடும்பத்தினரும் மன்னித்து ஏற்றுக்கொண்டனர். இந்த சமரசத்தை அடுத்து இரு ஜோடிகளும் அவரவர் வீடுகளுக்கு சென்றனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குற்றம்
காவல்
இந்தியா

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved