MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • எங்கும் வெள்ளக்காடாக மாறும்.. கேரளாவில் அப்படியே பலித்த பஞ்சாங்க கணிப்பு.. அப்ப தமிழ்நாட்டுக்கு?

எங்கும் வெள்ளக்காடாக மாறும்.. கேரளாவில் அப்படியே பலித்த பஞ்சாங்க கணிப்பு.. அப்ப தமிழ்நாட்டுக்கு?

கேரள வெள்ளம் குறித்து ஏற்கனவே தமிழ் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது. அதில் என்ன தெரிவிக்கப்பட்டுள்ளது என்று இந்த பதிவில் பார்க்கலாம்..

1 Min read
Ramya s
Published : Aug 09 2024, 09:12 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
wayanad ladslide

wayanad ladslide

கேரளாவில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் அம்மாநிலத்தின் பல இடங்களிலும் பல நாட்களாகவே கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் 28-ம் தேதி முதல் வயநாடு உள்ளிட்ட பல பகுதிகளில் இடைவிடாது கனமழை பெய்தததால் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.

25
Kerala Flood

Kerala Flood

நாட்டையே உலுக்கிய இந்த நிலச்சரிவில் இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவில் வீடு, உடைமைகளை இழந்த ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 200 பேரில் நிலை என்னவென்பதே தெரியவில்லை. வயாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னார்வலர்கள், பொதுமக்கள், பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் உதவிகளை செய்து வருகின்றனர்.

35
Kerla flood

Kerla flood

கேரள வெள்ளம் குறித்து ஏற்கனவே தமிழ் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது. 2024-ம் ஆண்டு இந்தியாவில் என்னென்ன நிகழ்வுகள் நடக்கும் என்று பஞ்சாங்கம் கணித்துள்ளது. அதன்படி, இந்தியாவில் இந்த ஆண்டு மின் கட்டணம் உயரும், மேலும் பல அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

45
Tamil panchangam predictions about flood

Tamil panchangam predictions about flood

மேலும் “ பம்பாய், ஒரிசா, காசி, கயா, உத்தப்பிரதேசம், மத்திய பிரதேசம் தெலங்கானா போன்ற மாநிலங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும். கேரளாவில் தென்மேற்கு பருவமழை பொழிந்து எங்கும் வெள்ளக்காடாக மாறும்” என்று கணிக்கப்பட்டுள்ளது. இதில் கேரளா மற்றும் வட மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் இந்த கணிப்புகள் உண்மையாக மாறி உள்ளது. 

 

55
flood

flood

தமிழ் பஞ்சாங்கத்தின் படி “ 2024-ம் ஆண்டு 16 புயல் உருவாகும், அதில் 9 புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி சூறாவளி காற்றுடன் கனமழை பெய்யும். தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் மிக கடுமையான கனமழை பெய்யும். குற்றாலம், மூணாறு, வால்பாறை ஆகிய நீர்வீழ்ச்சிகளில் வெள்ளம் அதிகமாக இருக்கும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved