MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • மது,சிககெட் வரிசையில் சமோசா,ஜிலேபி?! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட மத்திய சுகாதாரத்துறை!

மது,சிககெட் வரிசையில் சமோசா,ஜிலேபி?! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட மத்திய சுகாதாரத்துறை!

சமோசா, ஜிலேபி போன்ற நொறுக்குத்தீனிகளில் சுகாதார எச்சரிக்கைகள் அச்சிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 2050க்குள் வாழ்வியல் மாற்ற நோய்கள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதால், இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.மக்கள் நலமுடன் வாழ வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

2 Min read
Vedarethinam Ramalingam
Published : Jul 15 2025, 12:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
சமோசா, ஜிலேபி பிரியர்களா நீங்கள்?
Image Credit : Getty

சமோசா, ஜிலேபி பிரியர்களா நீங்கள்?

சிகரெட் பாக்கெட்டுகள், மது பாட்டில்கள் போன்றவைகளில் “உடல்நலத்துக்கு தீங்கு” என எச்சரிக்கை வாசகங்கள் இருப்பது சகஜமாகிப் போயிருக்கிறது. ஆனால், இனிமேல் நம் பக்கத்து கடையில் கிடைக்கும் சமோசா, ஜிலேபி, பக்கோடா போன்ற நொறுக்குத்தீனிகளிலும் இப்படிப்பட்ட எச்சரிக்கைகள் அச்சிடப்பட இருக்கின்றன என்றால் நம்ப முடியுமா? ஆம், மத்திய அரசு இப்படி ஒரு முக்கிய திட்டத்தை நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளது.

27
துரத்தும் நீரழிவு, ரத்த அழுத்தம்
Image Credit : Asianet News

துரத்தும் நீரழிவு, ரத்த அழுத்தம்

சமீபத்தில் பிரபல மருத்துவ இதழான லான்செட் வெளியிட்ட ஆய்வு அறிக்கையின்படி, 2050ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 44 கோடி பேர் உடல் பருமன், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற பலவித வாழ்வியல் மாற்ற நோய்களால் பாதிக்கப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது. இது மக்கள் சுகாதாரத்தைப் பொருத்தவரை மிகப்பெரிய எச்சரிக்கை மணி.

Related Articles

Related image1
சாப்பாட்டிற்கு பிறகு எவ்வளவு நேரம் கழித்து தண்ணீர் குடித்தால் உடலுக்கு நல்லது?
Related image2
kadalai mittai: கடலை மிட்டாய் சாப்பிட்டால் உடலுக்கு இவ்வளவு நல்லதா? இத்தனை நாள் தெரியலியே
37
மருத்து நிபுணர்கள் எச்சரிக்கை
Image Credit : Pinterest

மருத்து நிபுணர்கள் எச்சரிக்கை

இதற்கு முன்னர் பல மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து கூறி வந்த ஒரு விஷயம் என்னவென்றால், அதிக சர்க்கரை, அதிக கொழுப்பு, அதிக மாவுச்சத்து கொண்ட உணவுகள் உடலில் மங்கலான மாற்றங்களை உண்டாக்கும். இவ்வாறு சாப்பிடும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக தீங்கு விளைவித்து, பலவித நோய்களுக்கு மூல காரணமாக அமைகின்றன. இந்த உணவுகளின் பாவனை பட்டு சுகாதாரத்திற்கு ஆபத்து ஏற்படுவதை மத்திய அரசு தற்போது தீவிரமாகக் கவனித்து வருகிறது.

47
எச்சரிக்கை வாசகம் வைக்க முடிவு
Image Credit : Pinterest

எச்சரிக்கை வாசகம் வைக்க முடிவு

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, சமோசா, ஜிலேபி, பக்கோடா உள்ளிட்ட நொறுக்குத்தீனிகள் விற்கும் கடைகளின் முன்பகுதியில், அதில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்புச்சத்து பற்றிய விவரங்களும், அவை உடலுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகளும் குறித்து எச்சரிக்கை வாசகங்கள் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

57
நாக்பூரில் அமல்படுத்த திட்டம்
Image Credit : Freepik

நாக்பூரில் அமல்படுத்த திட்டம்

முதற்கட்டமாக, மஹாராஷ்டிராவின் நாக்பூர் நகரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை உணவகத்தில் சோதனை நடவடிக்கையாக இந்த எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட உள்ளன. அதன் பிறகு, மற்ற பகுதிகளிலும் இதையே நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் நோக்கம், மக்கள் இந்த உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பதில் இல்லை. அவற்றின் பாவனை கட்டுப்படுத்தி, நலமுடன் வாழ வேண்டும் என்பதே.

67
தடை விதிக்கவில்லை
Image Credit : freepik

தடை விதிக்கவில்லை

மத்திய சுகாதாரத் துறை தரப்பில் கூறப்பட்டதாவது: “இந்த எச்சரிக்கை வாசகம் வெறும் அறிவுறுத்தலுக்காக மட்டுமே. இந்த உணவுகளுக்கு தடை விதிப்பது எதுவும் இல்லை. ஆனால், அதிக அளவில் இதுபோன்ற உணவுகளைச் சாப்பிடுவதை ஊக்குவிக்கக் கூடாது என்பதற்காகவே, எச்சரிக்கை நடைமுறை அமல்படுத்தப்படுகிறது.”

77
அரசின் உத்தரவை மதிப்போம்
Image Credit : Freepik

அரசின் உத்தரவை மதிப்போம்

நாம் எந்தவொரு பொருளையும் மிகைப்படுத்திப் பயன்படுத்தினால் அது நம்மை பாதிக்கும் என்பதே இதன் சாரம். சுகாதாரத்தை பேண அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம் இது. தினமும் சாப்பிடும் உணவு, அதன் மூலம் கிடைக்கும் ஊட்டச்சத்து, அதேசமயம் அதன் ஆபத்துக்கள் பற்றிய விழிப்புணர்வு, நம் நலத்திற்கே பயனுள்ளதாக இருக்கும்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
மத்திய அரசு
சுகாதார நன்மைகள்
ஆரோக்கியம்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved