MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • திரிபுரா, அசாமில் குலுங்கிய வீடுகள்.. அதிகாலையில் தூக்கத்தில் இருந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம்!

திரிபுரா, அசாமில் குலுங்கிய வீடுகள்.. அதிகாலையில் தூக்கத்தில் இருந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம்!

திரிபுரா மற்றும் அசாம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் இன்று அதிகாலை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.1 வரை பதிவான இந்த நில அதிர்வுகள், அருணாசலப் பிரதேசம், மேகாலயா உள்ளிட்ட பல பகுதிகளிலும் உணரப்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.

1 Min read
Author : vinoth kumar
Published : Jan 05 2026, 09:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Image Credit : Getty

வடகிழக்கு மாநிலங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. திரிபுராவின் கோமதி பகுதியில் இன்று அதிகாலை 3.33 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதுரிக்டர் அளவுகோலில் 3.9ஆக பதிவாகி இருந்தது. இதனையடுத்து பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு வீட்டை வீட்டு வெளியேறினர்.

23
Image Credit : Asianet News

அதேபோல் அசாம் மாநிலத்தில் மோரிகானில் அதிகாலை 4.17 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.1ஆக பதிவாகி இருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் பிரம்மபுத்திராவின் தெற்கு கரையில் உள்ள மோரிகான் மாவட்டத்தில் 50 கி.மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட ஆழத்தில் 26.37 வடக்கு அட்சரேகையிலும், 91.50 டிகிரி கிழக்கு தீர்க்க ரேகையில் அமைந்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் அருணாசலப் பிரதேசத்தின் சில மத்திய மேற்கு பகுதிகளில் மேகாலயா, நாகலாந்து, மணிப்பூர், மிசோரம், மேற்கு வங்கம் பகுதியில் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Articles

Related image1
ஒரே தீ.. 600 பைக்குகள் சாம்பல்.. கேரளாவின் திருச்சூர் ரயில் நிலையத்தில் பயங்கரம்
Related image2
Ramjet: முடிஞ்சா தடுத்து பாரு.. சென்னை ஐஐடி மரண மாஸ் கண்டுபிடிப்பு.. மிரளும் நாடுகள்!
33
Image Credit : Asianet News

ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து பொதுமக்கள் வீடு குலுங்கியதை அடுத்து அலறி அடித்துக்கொண்டு வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்து சாலையில் தஞ்சம் அடைந்தனர். சுமார் ஒரு மணி நேர இடைவேளையில் அடுத்தடுத்து இரண்டு மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களிடையே அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர் இழப்புக்களும், சேதம் மற்றும் பாதிப்பு குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இந்தியா
நிலநடுக்கம்
நிலநடுக்கம் செய்திகள்
நிலநடுக்க அச்சுறுத்தல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
இந்தியாவின் முதல் AI கிளினிக் திறப்பு! அரசு மருத்துவமனையில் ஹை-டெக் ட்ரீட்மென்ட்!
Recommended image2
Ramjet: முடிஞ்சா தடுத்து பாரு.. சென்னை ஐஐடி மரண மாஸ் கண்டுபிடிப்பு.. மிரளும் நாடுகள்!
Recommended image3
சட்டவிரோத கல்குவாரியில் பாறை சரிந்து விபத்து.. ஓனரின் அலட்சியத்தால் பறிபோன உயிர்கள்! ஒடிசாவில் பரபரப்பு!
Related Stories
Recommended image1
ஒரே தீ.. 600 பைக்குகள் சாம்பல்.. கேரளாவின் திருச்சூர் ரயில் நிலையத்தில் பயங்கரம்
Recommended image2
Ramjet: முடிஞ்சா தடுத்து பாரு.. சென்னை ஐஐடி மரண மாஸ் கண்டுபிடிப்பு.. மிரளும் நாடுகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved