MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • இந்திய ரயில்வேயில் எத்தனை லட்சம் காலியிடங்கள் உள்ளது ? RTI கேள்விக்கு கிடைத்த அதிர்ச்சி பதில்

இந்திய ரயில்வேயில் எத்தனை லட்சம் காலியிடங்கள் உள்ளது ? RTI கேள்விக்கு கிடைத்த அதிர்ச்சி பதில்

உலகிலேயே 4-வது பெரிய ரயில்வே அமைப்பாக கருதப்படும் இந்திய ரயில்வேயில் பணியாளர் பற்றாக்குறை நிலவுவதாகவும், லட்சக்கணக்கான காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. 

1 Min read
Author : Ramya s
| Updated : Jun 29 2023, 07:54 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

இந்திய ரயில்வே என்பது நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை போக்குவரத்து நிறுவனம் ஆகும். நாடு முழுவதும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணிக்கின்றனர். உலகிலேயே 4-வது பெரிய ரயில்வே அமைப்பாக கருதப்படும் இந்திய ரயில்வேயில் பணியாளர் பற்றாக்குறை நிலவுவதாகவும், லட்சக்கணக்கான காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

ஜூன் 2023 நிலவரப்படி ரயில்வேயில் சுமார் 2.74 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன, அவற்றில் 1.7 லட்சத்திற்கும் அதிகமானவை பாதுகாப்பு பிரிவில் உள்ளன என்று RTI மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.

35

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்டிஐ ஆர்வலர் சந்திர சேகர் கவுர் என்பவர் தாக்கல் செய்த கேள்விக்கு இந்திய ரயில்வே பதிலளித்துள்ளது. அதில், குரூப் சி பிரிவில் லெவல் 1 உட்பட 2,74,580 பணியிடங்கள் காலியாக உள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது.

45

இதில் பாதுகாப்புப் பிரிவில் மொத்தம் 1,77,924 காலியிடங்கள் உள்ளன. 01.06.2023 நிலவரப்படி, இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள குரூப்-சி (நிலை-1 உட்பட) காலியாக உள்ள மொத்த அரசிதழ் அல்லாத பணியிடங்களின் எண்ணிக்கை: 2,74,580 என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

55

2022 டிசம்பரில், ரயில்வேயில் 3.12 லட்சம் அரசிதழ் அல்லாத பணியிடங்கள் காலியாக உள்ளதாக ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
அஸ்வினி வைஷ்ணவ்
இந்திய இரயில்வே
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
EPFO சம்பள வரம்பு உயர்வால் கைக்கு வரும் சம்பளம் குறையுமா? ஊழியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முழு விவரம்!
Recommended image2
Longest Train Journeys In India: 3 பகல், 3 இரவு... இந்தியாவையே கடக்கும் ரயில் பயணம்! 75 மணி நேரம் தொடரும் பிரம்மாண்ட Train Travel.!
Recommended image3
150 vs 151: மகனை ஜெயிக்க வைத்துவிட்டு மறைந்த தாய்... நெஞ்சை உருக்கும் தேர்தல் களம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved