MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • எரிந்த பணத்தின் மர்மம்... மூவர் குழுவுக்கு மாறும் யஷ்வந்த் வர்மா வழக்கு!

எரிந்த பணத்தின் மர்மம்... மூவர் குழுவுக்கு மாறும் யஷ்வந்த் வர்மா வழக்கு!

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது, யஷ்வந்த் வர்மாவின் இல்லத்தில் கணக்கில் காட்டப்படாத பணம் கண்டுபிடிக்கப்பட்டதால், பதவி நீக்க விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

1 Min read
SG Balan
Published : Aug 12 2025, 04:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
நீதிபதி யஷ்வந்த் வர்மா வழக்கு
Image Credit : X

நீதிபதி யஷ்வந்த் வர்மா வழக்கு

அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக பதவி நீக்க விசாரணை நடத்த, மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.

25
யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டு என்ன?
Image Credit : ANI

யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டு என்ன?

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது, கடந்த மார்ச் 14 அன்று, யஷ்வந்த் வர்மாவின் டெல்லியில் உள்ள அதிகாரப்பூர்வ இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது தீயணைப்பு வீரர்கள், வீட்டின் ஒரு அறையில் எரிந்த நிலையில் கட்டுக்கட்டாக பணம் இருப்பதைக் கண்டனர். இது கணக்கில் காட்டப்படாத பணம் என குற்றம்சாட்டப்பட்டது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

Related Articles

Related image1
வெளில வந்த சீக்ரெட்! நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு உச்ச நீதிமன்றம் கொடுத்த டோஸ்!
Related image2
திமுகவுக்கு மீண்டும் அடி..! மக்களிடம் Otp கேட்கக் கூடாது என உச்ச நீதிமன்றமும் அதிரடி
35
உள் விசாரணைக் குழு மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு
Image Credit : our own

உள் விசாரணைக் குழு மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா ஒரு உள் விசாரணைக் குழுவை அமைத்தார். இந்தக் குழுவின் அறிக்கையை எதிர்த்து, நீதிபதி யஷ்வந்த் வர்மா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், ஆகஸ்ட் 7 அன்று, நீதிபதிகள் திபாங்கர் தத்தா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசி அடங்கிய அமர்வு, உள் விசாரணைக் குழுவின் அறிக்கை சட்டப்பூர்வமானது எனக் கூறி, நீதிபதி வர்மாவின் மனுவை தள்ளுபடி செய்தது.

45
மக்களவையில் தீர்மானம்
Image Credit : our own

மக்களவையில் தீர்மானம்

இந்தத் தீர்ப்புக்குப் பிறகு, 146 மக்களவை உறுப்பினர்கள் கையெழுத்திட்ட, நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்யக் கோரும் தீர்மானத்தை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றுக்கொண்டார். இதைத் தொடர்ந்து, விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

55
விசாரணைக் குழு உறுப்பினர்கள்
Image Credit : x account

விசாரணைக் குழு உறுப்பினர்கள்

நீதிபதி அமித் குமார், நீதிபதி மனிந்தர் மோகன் ஸ்ரீவஸ்தவா, மூத்த வழக்கறிஞர் பி.பி. ஆச்சார்யா ஆகியோர் விசாரணைக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இந்த குழு, நீதிபதி வர்மா மீதான குற்றச்சாட்டுகளை விசாரித்து, தனது அறிக்கையை அளிக்கும். அதன் அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த விசாரணை, நீதித்துறை வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
இந்தியா
உச்ச நீதிமன்றம்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved