MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • சமூக நீதி, நல்லாட்சி வென்றுள்ளது..! பிரதமர் மோடி பெருமிதம்..! நிதிஷ்குமாருக்கு புகழாரம்!

சமூக நீதி, நல்லாட்சி வென்றுள்ளது..! பிரதமர் மோடி பெருமிதம்..! நிதிஷ்குமாருக்கு புகழாரம்!

Bihar Election 2025: சமூக நீதி, நல்லாட்சி வென்றுள்ளதாக பீகார் தேர்தல் வெற்றி குறித்து பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். நிதிஷ்குமார், சிராக் பாஸ்வான் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களை அவர் வாழ்த்தியுள்ளார்.

1 Min read
Rayar r
Published : Nov 14 2025, 06:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தேசிய ஜனநாயக கூட்டணி மெகா வெற்றி
Image Credit : Asianet News

தேசிய ஜனநாயக கூட்டணி மெகா வெற்றி

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ளது. இப்போது வரை பாஜக, ஜேடியு கூட்டணி 204 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. பாஜக 92 இடங்களிலும், ஜேடியு 84 இடங்களிலும், எல்ஜேபி 19 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. அதே வேளையில் காங்கிரஸ், ஆர்ஜேடியின் மகாபந்தன் கூட்டணி 33 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது.

24
சமூக நீதி வென்றுள்ளது
Image Credit : Asianet News

சமூக நீதி வென்றுள்ளது

இந்த நிலையில், பீகார் தேர்தல் வெற்றியின் மூலம் சமூக நீதி, நல்லாட்சி வென்றுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''நல்லாட்சி வென்றுள்ளது. வளர்ச்சி வென்றுள்ளது. மக்கள் நல உணர்வு வென்றுள்ளது. சமூக நீதி வென்றுள்ளது. 2025 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வரலாற்று சிறப்புமிக்க மற்றும் ஈடு இணையற்ற வெற்றியை அளித்ததற்காக பீகார் மக்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி.

Related Articles

Related image1
Maithili Thakur: 25 வயதில் எம்.எல்.ஏ..! நாட்டுப்புற பாடகி டூ அரசியல்வாதி..! யார் இந்த மைதிலி தாக்கூர்?
Related image2
இஸ்லாமிய வாக்குகளை மொத்தமாக வாரிச்சுருட்டிய பாஜக + ஜேடியு..! பலத்த அடி வாங்கிய காங்கிரஸ்!
34
எங்களுக்கு புதிய பலம்
Image Credit : Asianet News

எங்களுக்கு புதிய பலம்

இந்தத் தீர்ப்பு மக்களுக்குச் சேவை செய்வதற்கும் பீகாருக்காகப் பணியாற்றுவதற்கும் எங்களுக்குப் புதிய பலத்தைத் தந்துள்ளது. வரவிருக்கும் காலங்களில் பீகாரின் முன்னேற்றத்திற்காகவும், அதன் உள்கட்டமைப்புக்காகவும், பீகாரின் கலாச்சாரத்திற்காகவும் இன்னும் அதிகமாகப் பாடுபடுவோம். மாநிலத்தின் இளைஞர் சக்தி, மற்றும் பெண் சக்தி வளமான வாழ்க்கையை நடத்துவதற்கான பல வாய்ப்புகள் கிடைப்பதை நாங்கள் உறுதி செய்வோம்.

44
நிதிஷ்குமார், சிராக் பாஸ்வானுக்கு வாழ்த்து
Image Credit : Asianet News

நிதிஷ்குமார், சிராக் பாஸ்வானுக்கு வாழ்த்து

தேசிய ஜனநாயகக் கூட்டணி மாநிலத்திற்கு முழுமையான வளர்ச்சியை வழங்கியுள்ளது. எங்களுடைய செயல்பாட்டுகளின் அடிப்படையிலும், மாநிலத்தை மேலும் புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்லும் தொலைநோக்குத் திட்டத்தின் அடிப்படையிலும் மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர். 

இந்த இணையற்ற வெற்றிக்காக முதல்வர் நிதீஷ் குமார் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியை சேர்ந்த எங்கள் கூட்டாளிகளான சிராக் பாஸ்வான், ஜிதன் ராம் மஞ்சி மற்றும் உபேந்திர குஷ்வாஹா ஆகியோருக்கு வாழ்த்துக்கள் தெரித்துக் கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
பீகார் தேர்தல்
பீகார்
பிரதமர் மோடி
அரசியல்
பிஜேபி
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved