MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • ஏர் இந்தியா விபத்துக்கு விமானிகள் மீது பழிபோடுவதா? விமானிகள் சங்கம் அதிருப்தி

ஏர் இந்தியா விபத்துக்கு விமானிகள் மீது பழிபோடுவதா? விமானிகள் சங்கம் அதிருப்தி

ஜூன் 12 அன்று நடந்த ஏர் இந்தியா விமான விபத்து குறித்த AAIB அறிக்கையில் பைலட் செய்த தவறுதான் விபத்துக்குக் காரணம் என்ற கூற்றை விமானிகள் சங்கம் நிராகரித்துள்ளது. விசாரணைக் குழுவில் தகுதியான விமானிகள் சேர்க்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளது.

1 Min read
SG Balan
Published : Jul 12 2025, 05:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ஏர் இந்தியா விமான விபத்து
Image Credit : ANI

ஏர் இந்தியா விமான விபத்து

ஜூன் 12 அன்று நடந்த ஏர் இந்தியா விமான விபத்து குறித்த விமான விபத்து புலனாய்வுப் பணியகத்தின் (AAIB) அறிக்கைக்கு இந்திய விமானிகள் சங்கம் (ALPA India) சனிக்கிழமை அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. பைலட் செய்த தவறுதான் விபத்துக்குக் காரணம் என்ற தொனியில் அறிக்கையில் உள்ள கூற்றை நிராகரிப்பதாக விமானிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

25
உண்மை அடிப்படையிலான விசாரணை
Image Credit : ANI

உண்மை அடிப்படையிலான விசாரணை

"விசாரணையின் தொனி பைலட் செய்த தவறுதான் விபத்துக்குக் காரணம் என்ற சார்புநிலையைக் காட்டுகிறது. இந்த அனுமானத்தை நாங்கள் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம். மேலும் நியாயமான, உண்மை அடிப்படையிலான விசாரணை நடத்த வலியுறுத்துகிறோம்," என்று விமானிகள் சங்கம் கூறியது.

Related Articles

Related image1
ஏர் இந்தியா விமான விபத்து: என்ஜின் ஏன் நின்றது.? 10 அதிர்ச்சி தகவல்கள்
Related image2
விமான விபத்தில் என்ஜின் செயலிழப்பு மர்மம்.! ஏர் இந்தியா, போயிங் என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா.?
35
விசாரணையில் வெளிப்படைத்தன்மை இல்லை
Image Credit : Getty

விசாரணையில் வெளிப்படைத்தன்மை இல்லை

"அறிக்கை எந்தவொரு அதிகாரப்பூர்வ கையொப்பமோ அங்கீகாரமோ இல்லாமல் ஊடகங்களுக்குக் கசிந்துள்ளது. விசாரணையில் வெளிப்படைத்தன்மை இல்லை, ஏனெனில் விசாரணைகள் தொடர்ந்து ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இதனால் நம்பகத்தன்மை குறைகிறது. தகுதியான, அனுபவம் வாய்ந்த பணியாளர்கள், குறிப்பாக விமானிகள், இன்னும் விசாரணைக் குழுவில் சேர்க்கப்படவில்லை" என்றும் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

45
எரிபொருள் நிறுத்தம்
Image Credit : Getty

எரிபொருள் நிறுத்தம்

அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமானத்தின் விபத்து குறித்த முதல் அறிக்கை, விமானம் புறப்பட்ட 3 வினாடிகளுக்குப் பிறகு இரு என்ஜின்களுக்கும் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டதாகக் கூறுகிறது. எரிபொருள் செல்வதை நிறுத்தும் சுவிட்சுகள் ஒன்றன் பின் ஒன்றாக 'RUN' நிலையிலிருந்து 'CUTOFF' நிலைக்கு மாறியதே இதற்குக் காரணம் என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது.

55
காக்பிட் குரல் பதிவு
Image Credit : ANI

காக்பிட் குரல் பதிவு

AAIB அறிக்கையின்படி, விமானத்தின் சிதைவுகள் சுமார் 1,000 அடிக்கு 400 அடி பரப்பளவில் பரவியிருந்தன. காக்பிட் குரல் பதிவில், ஒரு விமானி மற்றவரிடம் ஏன் எரிபொருளை நிறுத்தினீர்கள் என்று கேட்பதும், அதற்கு மற்றவர் தான் அதைச் செய்யவில்லை என்று பதிலளிப்பதும் பதிவாகியுள்ளது எனவும் அறிக்கை தெரிவித்துள்ளது.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
ஏர் இந்தியா
குஜராத்
அகமதாபாத்
இந்தியா
வானூர்திப் பயணங்கள்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved