MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • 'அன்பே சிவம்'னு சொன்னா போதும்... சோழ மண்டலத்தை அதிர வைத்த மோடி!

'அன்பே சிவம்'னு சொன்னா போதும்... சோழ மண்டலத்தை அதிர வைத்த மோடி!

பிரதமர் மோடி கங்கை கொண்ட சோழபுரம் கோயிலுக்கு வருகை தந்து ராஜேந்திர சோழனுக்கு அஞ்சலி செலுத்தினார். திருமூலரின் 'அன்பே சிவம்' என்ற கருத்தைப் பாராட்டிய அவர், சோழ மன்னர்களின் இராஜதந்திர உறவுகளைப் பற்றியும் பேசினார்.

1 Min read
SG Balan
Published : Jul 27 2025, 04:01 PM IST| Updated : Jul 27 2025, 04:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
அன்பே சிவம் பற்றி மோடி பேச்சு
Image Credit : ANI

அன்பே சிவம் பற்றி மோடி பேச்சு

சோழப் பேரரசர் முதலாம் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கங்கை கொண்ட சோழபுரம் கோயிலுக்கு வருகை தந்து பிரார்த்தனை செய்தார்.

பாரம்பரிய உடையான வெள்ளை வேட்டி, சட்டை மற்றும் அங்கவஸ்திரம் அணிந்து வந்த பிரதமர் மோடியை கோயில் அர்ச்சகர்கள் வரவேற்றனர். சோழர் பாரம்பரியத்துடன் நெருங்கிய தொடர்புடைய ஆடி திருவாதிரை விழாவில் அவர் பங்கேற்றார்.

24
திருமூலரின் தொலைநோக்குப் பார்வை
Image Credit : ANI

திருமூலரின் தொலைநோக்குப் பார்வை

பின்னர் பேசிய பிரதமர் மோடி, திருமூலர் "அன்பே சிவம்" என்று கூறியது தொலைநோக்கான பார்வை என்றும் சைவ சித்தாந்தத்தின் கொள்கைகளைத் தழுவுவதன் மூலம் உலகின் பல பிரச்சனைகளைத் தீர்க்க முடியும் என்றும் தெரிவித்தார்.

சோழ மன்னர்கள் இலங்கை, மாலத்தீவுகள் மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் பகுதிகளுடன் இராஜதந்திர உறவுகளை எவ்வாறு பலப்படுத்தினார்கள் என்பதையும் அவர் எடுத்துரைத்தார். ராஜேந்திர சோழனுக்கும் ராஜராஜ சோழனுக்கும் சிலை அமைக்கப்படும் எனவும் பிரதமர் மோடி அறிவித்தார்.

Related Articles

Related image1
சிவன் புகழ்பாடிய இசைஞானி இளையராஜா! அப்படியே மெய் மறந்து ரசித்த பிரதமர் மோடி! உருகிய அரங்கம்!
Related image2
கங்கைகொண்ட சோழபுரத்தில் காலடி பதித்த முதல் பிரதமர்! தமிழர்களின் பாரம்பரிய உடையில் மனமுருகி வழிபட்ட மோடி!
34
ராஜேந்திர சோழன் நினைவு நாணயம்
Image Credit : ANI

ராஜேந்திர சோழன் நினைவு நாணயம்

முன்னதாக, தமிழ்நாட்டிற்கு தனது இரண்டு நாள் பயணத்தின் பகுதியாக, கங்கை கொண்ட சோழபுரத்திற்கு பிரதமர் வருகை தந்ததையொட்டி, காவல்துறையினர் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

தனது பயணத்தின் இறுதி நாளான இன்று, முதலாம் ராஜேந்திர சோழன் தென்கிழக்கு ஆசியாவிற்கு கடல்வழிப் பயணம் மேற்கொண்டதன் 1,000 ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நிகழ்விலும் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். ராஜேந்திர சோழனின் நினைவாக ஒரு நினைவு நாணயத்தையும் அவர் வெளியிடவுள்ளார்.

44
பிரமாண்டமான வரவேற்பு
Image Credit : x/@narendramodi

பிரமாண்டமான வரவேற்பு

பிரதமரின் வருகையை முன்னிட்டு கங்கைகொண்ட சோழபுரம் கோயிலுக்குச் செல்லும் சாலைகள் பாஜக மற்றும் அதிமுக கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. ராஜ ராஜ சோழனின் உருவப்படங்கள் மற்றும் பிரதமரை வரவேற்கும் செய்திகளைக் கொண்ட பதாகைகள், ஃப்ளெக்ஸ் போர்டுகளும் இடம்பெற்றிருந்தன.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
இந்தியா
நரேந்திர மோடி
ஆன்மீகம்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved