MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உங்களை ”மீண்டும்...” ”மீண்டும்...” சிப்ஸ் சாப்பிட தூண்டுவது இதுதானாம்..!!

உங்களை ”மீண்டும்...” ”மீண்டும்...” சிப்ஸ் சாப்பிட தூண்டுவது இதுதானாம்..!!

நொறுக்குத் தீனி மீதான அதீத ஈர்ப்பு ஒரு மரபணுவால் தூண்டப்படுவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதுதான் உணவுகளை சாப்பிடும் சாப்பிடு என்று சொல்லி மனிதர்களை தூண்டுகிறதாம். அதற்கு சி.ஆர்.டி.சி. 1 என்று பெயர், இது மனிதர்களுக்கு ஏற்படும் உடல் பருமனுடன் தொடர்புடையதாகும்.

2 Min read
Dinesh TG
Published : Jan 18 2023, 03:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

இந்தியா நொறுக்குத் தீனிகளுக்கும் பெயர்போன நாடு தான். இங்கு கிடைக்கும் விதவிதமான ரக ரகமான நொறுக்குத் தீனி வகைகளை வேறு எங்கும் பார்க்க முடியாது. அதனால் இந்திய நொறுக்குத் தீனி வகைகளை சாப்பிட ஆரம்பித்தால், பாக்கெட்டை காலி பண்ணாமல் இருக்க முடியாது. அதிலும் குறிப்பாக சிப்ஸ் பாக்கெட் கிடைத்தாலும், மீண்டும்... மீண்டும் வாங்கி சாப்பிட்டுக்கொண்டே இருப்போம். ஒன்று, இரண்டு, மூன்று, சமயத்தில் நான்கு என பாக்கெட் பட்டியல் நீண்டு கொண்டே கூட செல்லும். ஆனால் நொறுக்குத் தீனி மீதான அதீத ஈர்ப்பு ஒரு மரபணுவால் தூண்டப்படுவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதுதான் உணவுகளை சாப்பிடும் சாப்பிடு என்று சொல்லி மனிதர்களை தூண்டுகிறதாம். அதற்கு சி.ஆர்.டி.சி. 1 என்று பெயர், இது மனிதர்களுக்கு ஏற்படும் உடல் பருமனுடன் தொடர்புடையதாகும்.

26
potato chips

potato chips

இது மூளையில் அமைந்துள்ள அனைத்து நியூரான்களிலும் வெளிப்படுகிறது. இதற்காக மெல்னோகார்டின் 4 என்கிற ஏற்பியை வெளியிடும் நியூரான்களை ஜப்பானைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஆய்வு செய்துள்ளனர். இதுதான் மனிதனுக்கு கொலஸ்ட்ரால் நிறைந்த உணவுகள், காரசாரமான சாப்பாட்டு வகைகள், நாவில் உமிழ்நீரை அதிகரிக்கச் செய்யும் சக்கரை உணவுகள் உள்ளிட்டவற்றை உண்ணச்சொல்லி தூண்டுகிறதாம். இறுதியில் இதன்மூலம் உடல் பருமன் ஏற்படும் அளவுக்கு பிரச்னை பெரிதாகிவிடுகிறது.

36

பொதுவாக அதிகளவில் உணவு உள்ளிட்ட நொறுக்குத் தீனிகளை சாப்பிடுவதால் எதுவும் நடந்துவிடாது. ஆனால் உணவுக்கு ஏற்றார் போல உழைப்பு இருப்பது முக்கியம். நீங்கள் உடலை இயக்கமில்லாமல் வைத்துக்கொண்டு நிறைய சாப்பிடக்கூடியவர்களாக இருந்தால், நிச்சயம் சக்கரை, ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் ஏற்படும். அது நாள்பட்ட நோய் பாதிப்பாக மாறி உயிருக்குக் கூட ஆபத்தாக முடியும்.
 

46

இதை படிப்பவர்களுக்கு மிகவும் அச்சமாக இருந்தால், கவலை அடைய வேண்டாம். நொறுக்குத் தீணி வகைகளை உணவு கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள சில வழிமுறைகள் உள்ளன. அதன்படி நாம் தினமும் மூன்று வேளை வயிறு நிறைய சாப்பிட வேண்டும். இதனால் இடையில் பசி எடுக்காமல், குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பசி எடுக்கும். அப்போது சாப்பாடு சாப்பிட்டால் போதுமானது. 

56

உங்களுடைய உணவை சீக்கரம் திங்காமல், மெதுவாக சாப்பிட்டு வர வேண்டும். உமில் நிறைந்து உணவை நன்றாக அரைத்த பின் விழுங்குங்கள். இதன்மூலம் உணவு எளிதில் ஜீரணமடையும். ஒருவேளை சாப்பிட்டாலும் இடை இடையே பசி எடுத்தால் ஒரு குவளை தண்ணீர் குடியுங்கள். ஒருநாளைக்கு குறைந்தது 8 டம்ளர் தண்ணீர் குடித்தால் போதும். இதுபோன்ற தேவையற்ற உணவுப் பழக்கத்தை குறைத்துவிடலாம்.
 

66

நீங்கள் உணவு சாப்பிடும் போது, அதில் அதிகளவு நார்ச்சத்து உள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். மேலும் அது புரதச்சத்து நிறைந்தவையாக இருப்பதும் முக்கியமாகும். அப்போது தான் ரத்த அழுத்தம், கொழுப்பு அளவு மற்றும் நீரிழிவு பிரச்னை போன்றவை கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். இதுதவிர உணவை பிரித்து உண்பது, உணவின் அளவை கருத்தில்கொள்வது மற்றும் பசிக்கும் போது மட்டும் சாப்பிடுவது போன்றவை அடுத்தடுத்து நாம் முறையாக பின்பற்ற வேண்டிய முக்கிய நடைமுறைகளாகும்.
 

About the Author

DT
Dinesh TG
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved