MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • Food : மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாத 10 உணவுகள்.! இதெல்லாம் விஷமாக மாறுமாம்.! புற்றுநோய் ஆபத்து வரும்.! எச்சரிக்கை.!

Food : மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாத 10 உணவுகள்.! இதெல்லாம் விஷமாக மாறுமாம்.! புற்றுநோய் ஆபத்து வரும்.! எச்சரிக்கை.!

10 Foods You Should Never Reheat : சமைத்த உணவுகளை மீண்டும் மீண்டும் சூடாக்கி சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறோம். ஆனால் சில உணவுகளை மீண்டும் சூடாக்கும் பொழுது அது விஷமாக மாறும் வாய்ப்பு உள்ளதாம். அந்த உணவு வகைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

3 Min read
Author : Ramprasath S
Published : May 03 2026, 04:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
10 Foods You Should Never Reheat
Image Credit : Asianet News

10 Foods You Should Never Reheat

சமைத்த உணவை மீண்டும் சூடாக்கி சாப்பிடும் பொழுது அது நேரத்தை மிச்சப்படுத்தினாலும், சில உணவுகளை மீண்டும் மீண்டும் சூடு படுத்தும் பொழுது அவை விஷமாக மாறவோ அல்லது செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தவோ அதிக வாய்ப்பு உள்ளது. இந்திய வீடுகளில் பெரும்பாலும் மீதமாகும் உணவுகளை பிரிட்ஜில் வைத்து மறுநாள் மீண்டும் சூடாக்கி சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளோம். ஆனால் எல்லா உணவுகளையும் அவ்வாறு சூடாக்கி சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல. மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாத உணவு வகைகளின் பட்டியல் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

28
கோழி இறைச்சி
Image Credit : Getty

கோழி இறைச்சி

கோழி இறைச்சியில் புரதச்சத்து அதிகம் இருக்கிறது என்பது நமக்கு தெரிந்ததே. ஆனால் சிக்கனை மீண்டும் சூடாக்கும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். புரதத்தின் அடர்த்தி மீண்டும் சூடாக்கும் பொழுது மாறுகிறது. இது சரியாக செரிக்காமல் வயிறு மந்தம் அல்லது அஜீரணத்தை உருவாக்கக்கூடும். மேலும் கோழியை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தும் பொழுது அது பாக்டீரியாவின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். ஒருமுறை கோழியை சமைத்து அதை அப்பொழுதே சாப்பிடுவது நல்லது. முதல் தடவை சமைக்கும் பொழுது 75 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் சமைக்க வேண்டும். அப்போதுதான் அதில் உள்ள பாக்டீரியாக்கள் அழியும்.

Related Articles

Related image1
Towel : உங்க டவல் சொரசொரப்பா ஆயிடுச்சா? இந்த ஒரே ஒரு டெக்னிக் போதும், புதுசு மாதிரி சாஃப்ட் ஆகிடும்.!
Related image2
Heart Disease: இதய நோயை தடுக்கும் இந்த ஒரு பழம் போதும்.! மாரடைப்பு, பக்கவாதம் எதுவும் வராதாம்.! மிஸ் பண்ணாம சாப்பிடுங்க.!
38
முட்டை
Image Credit : Getty

முட்டை

வேகவைத்த முட்டைகள் அல்லது வறுத்த முட்டைகளை மீண்டும் மீண்டும் சூடுபடுத்துதல் கூடாது. கோழியை போலவே முட்டையும் புரதச்சத்து நிறைந்த உணவாகும். சமைத்த முட்டையை மீண்டும் மீண்டும் சூடு படுத்துவது அதில் உள்ள புரத அமைப்பை சிதைத்து, நச்சுத்தன்மையை உருவாக்கலாம். இது கடுமையான வயிற்று வலி மற்றும் செரிமானக் கோளாறுகளுக்கு வழிவகுக்கும். முட்டையை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தும் பொழுது அது ரப்பர் போன்று மாறி சுவையை இழக்கும். இது வயிறு தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம் என்பதால் முட்டைகளை புதிதாக சமைத்து உட்கொள்வதே சிறந்தது.

48
காளான்கள்
Image Credit : stockPhoto

காளான்கள்

காளான்களை சமைத்த உடனேயே சாப்பிடுவது தான் சிறந்தது. காளான்களில் சிக்கலான புரதங்கள் மற்றும் என்சைம்கள் உள்ளன. இவற்றை மீண்டும் மீண்டும் சூடாக்கும் பொழுது அவை உடைகின்றன. இது இதய பிரச்சினைகள் மற்றும் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்த கூடும். காளான்களில் உள்ள புரதச்சத்துக்கள் மற்றும் நுட்பமான அமைப்பு மீண்டும் முறையற்ற வெப்ப நிலையில் சூடுபடுத்தும் பொழுது அதில் நச்சுத்தன்மை அதிகரிக்கலாம். இது ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும். எனவே காளான்களை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது.

58
கீரைகள்
Image Credit : Getty

கீரைகள்

கீரைகளில் இயற்கையாக நைட்ரேட்டுகள் அதிக அளவில் உள்ளன. கீரையை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தும் பொழுது அதில் உள்ள நைட்ரேட்டுகள் நைட்ரைட்டுக்களாக மாறுகின்றன. இது உடலுக்கு நச்சுத்தன்மையை ஏற்படுத்தி புற்றுநோய் செல்களை தூண்டும் காரணியாக அமையலாம். மேலும் கீரையில் உள்ள புரதம் சிதையும் பொழுது அது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். கீரையின் சுவை மற்றும் சத்துக்களை பாதுகாக்க பிரஷான கீரை வாங்கி வந்து புதிதாக சமைத்து உண்பது சிறந்தது.

68
சாதம்
Image Credit : Getty

சாதம்

முதல் நாள் வடித்த சாதத்தை மறுநாள் சூடுபடுத்தி சாப்பிடுவது பெரும் ஆபத்தை விளைவிக்கும். சாதத்தை அறைவெப்ப நிலையில் நீண்ட நேரம் வைத்திருந்தால் அதில் பேசிலஸ் செரியஸ் என்னும் பாக்டீரியாக்கள் உருவாகும். இதை மீண்டும் சூடு படுத்தினால் அந்த பாக்டீரியாக்கள் வெளியேற்றும் நச்சுக்கள் அழியாது. இது வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கை உருவாக்கும். எனவே சாதத்தை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது. மீண்டும் சூடு படுத்தும் பொழுது பேசிலஸ் செரியஸ் வளர்ச்சி அதிகரித்து முழு சாதத்தையும் நன்றாக மாற்றி விடும்.

78
உருளைக்கிழங்கு
Image Credit : stockPhoto

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கை சமைத்த பிறகு அதை அறை வெப்ப நிலையில் நீண்ட நேரம் வைத்திருந்து பின்னர் சூடுபடுத்தக் கூடாது. இதில் போர்டலிசம் என்னும் அரிய வகை பாக்டீரியாக்கள் வளர வாய்ப்புள்ளது. இதை சூடுபடுத்தும் பொழுது இதன் நச்சுத்தன்மை நீங்காமல் உடல் நலக் குறைவை ஏற்படுத்தும். உருளைக்கிழங்கை மீண்டும் சூடாக்கும் பொழுது, இந்த பாக்டீரியா அழிவதில்லை. மாறாக உணவில் நச்சுத்தன்மையும் நோய் பரவலுக்கும் வழிவகுக்கிறது.

88
 சமையல் எண்ணெய்
Image Credit : Istock

சமையல் எண்ணெய்

ஏற்கனவே பொறிக்க பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவது மிகவும் ஆபத்தானது. எண்ணெயை மீண்டும் சூடாக்கும் போது அதன் அடர்த்தி மாறி டிரான்ஸ் ஃபேட் என்னும் நச்சுப் புகை உருவாகும். இது புற்றுநோய் மற்றும் இதய நோய்களுக்கான முக்கிய காரணமாகிறது. மேலும் ஆலிவ் எண்ணெய்கள் போன்ற குறைந்த புகை புள்ளிகளைக் கொண்ட சமையல் எண்ணெய்களை மீண்டும் சூடாக்கும் பொழுது அது தீங்கு விளைவிக்கும் சேர்மங்களை உருவாக்கும் இதன் காரணமாக ஆக்சிஜனேற்ற அழுத்தம் உடலில் வீக்கம் போன்ற பிரச்சனைகள் உருவாகும்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாழ்க்கை முறை
ஆரோக்கியம்
ஆரோக்கிய குறிப்புகள்
சுகாதார நன்மைகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
குழந்தைகளின் மூளைக்கு எமனாகும் சிப்ஸ், குளிர்பானங்கள்.. மருத்துவர்கள் வார்னிங்.. மாற்று உணவுகள் லிஸ்ட்!
Recommended image2
Muskmelon Benefits: உடல் சூட்டை தணிக்கும் 'நேச்சுரல் கூலர்'! கிர்ணி பழம் தரும் 5 அபாரமான நன்மைகள்!
Recommended image3
Black Coffee: பிளாக் காஃபியின் 7 ஆச்சரியமூட்டும் நன்மைகள்! சர்க்கரை இல்லாமல் குடிப்பதால் இவ்வளவு ஹெல்த்தா?
Related Stories
Recommended image1
Towel : உங்க டவல் சொரசொரப்பா ஆயிடுச்சா? இந்த ஒரே ஒரு டெக்னிக் போதும், புதுசு மாதிரி சாஃப்ட் ஆகிடும்.!
Recommended image2
Heart Disease: இதய நோயை தடுக்கும் இந்த ஒரு பழம் போதும்.! மாரடைப்பு, பக்கவாதம் எதுவும் வராதாம்.! மிஸ் பண்ணாம சாப்பிடுங்க.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved