MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உறவுமுறை
  • சொந்த தங்கையை மணமுடித்த இளைஞர்.. ரெண்டு குழந்தைகள் பெற்ற பிறகு தெரிந்த உண்மை.. குடும்பத்துக்கே ஷாக்!!

சொந்த தங்கையை மணமுடித்த இளைஞர்.. ரெண்டு குழந்தைகள் பெற்ற பிறகு தெரிந்த உண்மை.. குடும்பத்துக்கே ஷாக்!!

சொந்த சகோதரியை மணந்து கொண்ட இளைஞர் ஆறு வருடங்கள் கழித்து உண்மையை தெரிந்து கொண்டார்.

2 Min read
maria pani
Published : Mar 16 2023, 05:14 PM IST| Updated : Mar 16 2023, 05:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

உறவுகள் பார்க்க அழகாக இருந்தாலும், அதை சரியாக புரிந்து கொள்ளாத போது சிக்கலாகிவிடும். அது எவ்வளவு உண்மை என்பது இங்கு நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒருவர் தனது சொந்த சகோதரியை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தியுள்ளார். கிட்டத்தட்ட 6 வருடங்கள் கழித்த பிறகு உண்மை அவருக்கு தெரிந்தது. எப்படி இந்த விபரீதம் நிகழ்ந்தது என்பதை இங்கு விவரமாக காணலாம். 

26

பல ஆண்டுகளுக்கு முன் பிறந்த சில நிமிடங்களில் ஒரு ஆண் குழந்தை தத்தெடுக்கப்பட்டது. இப்படி தத்தெடுத்ததை எங்கும் வெளியிடக் கூடாது என்ற விதி உள்ளதால், சிறுவனின் பெற்றோர் எந்த தகவலும் பகிரவில்லை. பல ஆண்டுகளுக்கு பிறகு அவர் ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவர்கள் ஆறு ஆண்டுகளாக ஒன்றாக குடும்பம் நடத்தினர்.

 

36

அண்மையில் அவர் தனது சிறுநீரகத்தை தனது மனைவிக்கு தானம் செய்ய முடியுமா? என்று சில சோதனைகளை செய்துள்ளார். அப்போது ​இருவரும் ஒரே தாயின் குழந்தைகள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த உண்மையை அவரை என்ன செய்திருக்கும்? அதுவும் இத்தனை ஆண்டுகள் ஊனும் உயிருமாக இருந்த மனைவியல்லவா அவள்... 

46

ஆறு ஆண்டுகளாக தன்னுடன் இருந்த மனைவியும், தன் குழந்தைகளின் தாயும் உண்மையில் தனது சகோதரி என்பதை அறிந்து அந்த நபர் பயங்கர அதிர்ச்சியடைந்தார். இந்த தகவலை Redditல் பகிர்ந்துள்ளார். அதாவது இத்தம்பதிக்கு மகன் பிறந்த பிறகு தான் சிக்கல் வந்துள்ளது. அவரது மனைவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய முயன்றபோது சரியான சிறுநீரகங்கள் கிடைக்கவில்லையாம். இதனால் தன்னுடைய சிறுநீரகத்தை கொடுக்க கணவர் முன்வரவே, பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

56

அப்போது HLA (Human Leukocyte Antigen) என்ற திசு சோதனை செய்யப்பட்டது. வேறு சில சோதனைகளும் மேற்கொள்ளப்பட்ட பிறகு, கணவன் மனைவியாக வாழ்ந்த இருவரும்... உடன்பிறப்பு என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த தகவலறிந்த பிறகு தான் அதிர்ச்சியாகவும் குழப்பமாகவும் இருப்பதாக அவர் (கணவன்) Redditல் பகிர்ந்துகொண்டுள்ளார். அவருக்கு சிலர் அதில் அறிவுரைகள் வழங்கி வருகின்றனர். அதாவது, "ஏற்கனவே ஒன்றாக வாழ்ந்து உங்களுக்கு குழந்தைகளும் உள்ளனர். இனியும் இப்படியே தொடருங்கள்' என்று ஒருவர் அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க: ச்சீ..!இந்த பிரச்சனை இருக்க ஆண்கள் கூட.. அவங்க மனைவி செக்ஸ் வச்சிக்காம விலகிடுவாங்க..!

66

மற்றொருவர்,"உங்களுக்கு ஏற்கனவே குழந்தைகள் உள்ளனர். அவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள். நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? வாழ்க்கைக்கு அவ்வளவுதான் முக்கியம். இல்லையா? உங்கள் மனைவிக்கு சிறுநீரகத்தை தானமாக கொடுங்கள், உங்கள் குழந்தைகளுக்கு நல்ல பெற்றோராக இருங்கள்" என நடைமுறை எதார்த்தத்தை பகிர்ந்துள்ளார். கடந்தகாலம் மீண்டும் வராது.. தெரிந்த உண்மைகளுடன் வாழ வேண்டியதுதான். 

இதையும் படிங்க: உடலுறவின்போது பெண்கள் இப்படியெல்லாம் கேட்குறாங்களா? ஆண்களின் பகீர் செக்ஸ் அனுபவங்கள்

About the Author

MP
maria pani
திருமணம்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved