- Home
- உடல்நலம்
- உணவு
- Murungai Keerai Soup உடலில் சோர்வு நீங்கி, சுறுசுறுப்பாக இருக்க. இந்த சூப் மட்டும் குடித்து பாருங்க போதும்.
Murungai Keerai Soup உடலில் சோர்வு நீங்கி, சுறுசுறுப்பாக இருக்க. இந்த சூப் மட்டும் குடித்து பாருங்க போதும்.
Murungai keerai soup eppadi seivadhu in Tamil: உடலில் ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, நாம் அடிக்கடி இந்த ஒரு சூப்பை எடுத்துக் கொண்டாலே போதும், அது என்ன சூப் என்பதை பற்றி நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்துக் கொள்வோம்.

murungai tea
நம்முடைய உடலில் ரத்த அணுக்களின் எண்ணிக்கை குறையும் பொழுது, உடல் சோர்வு, மந்தமான நிலை மற்றும் பல்வேறு உடல் உபாதைகள் நமக்கு ஏற்படுகிறது. இதில் இருந்து மீண்டு வருவதற்கு, நாம் அடிக்கடி இந்த ஒரு சூப்பை எடுத்துக் கொண்டாலே போதும், அது என்ன சூப் என்பதை பற்றி நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்துக் கொள்வோம்.
murungai tea
முருங்கைக் கீரை இரும்புச் சத்து, வைட்டமின், மினரல்கள் போன்ற பல்வேறு மருத்துவ குணம் கொண்டது. இதன் இலைகளை வாரத்திற்கு இரண்டு முறையாவது உணவுகளில் சேர்த்து சாப்பிடலாம். ஏனென்றால், இவை வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக உள்ளன. மேலும் இதில் நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்து காணப்படுவதால், சாதாரண தலைவலி, இருமல் ஏற்படும் போது முருங்கைக்கீரையில் செய்த சூப் சாப்பிட்டால் அவை பறந்து போகும்.
தேவையான பொருட்கள்:
முருங்கைக் கீரை – ஒரு கைப்பிடி
மிளகு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
சின்ன வெங்காயம்- 5
உப்பு- தேவையான அளவு
தண்ணீர் – 2 டம்ளர்
கருவேப்பிலை – ஒரு கொத்து
செய்முறை விளக்கம்:
முதலில் கைப்பிடி அளவுக்கு முருங்கைக் கீரை எடுத்துக்கொள்ளுங்கள். அதற்கு முன்பு முருங்கை இலையில் உள்ள காம்புகளை நன்றாக ஆய்ந்து கொள்ளுங்கள். பின்னர் அடுப்பில் ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். அதோடு ஆய்ந்து வைத்துள்ள முருங்கை இலைகளை அவற்றோடு சேர்த்து கொதிக்க விடவும்.
கொதிக்க ஆரம்பித்ததும், நறுக்கிய சின்ன வெங்காயத் துண்டுகள், ஒரு ஸ்பூன் மிளகுத் தூள், ஒரு ஸ்பூன் சீரகத் தூள் ஆகியவற்றை சேர்க்கவும். அதில் தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும்.
பிறகு, அடுப்பை அணைத்து அதை தனியாக வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது நமக்கு தேவையான முருங்கைக் கீரை சூப் தயார். இப்போது அடுப்பை அணைத்துவிட்டு, ஒரு கரண்டியில் முருங்கை இலை சூப்பை எடுத்து பரிமாறலாம்.
கொஞ்சம் சூடாகவே இதை அருந்துவது உடலுக்கு நல்லது. இதை வாரம் இருமுறை குடித்து வாருங்கள், உங்களுடைய ரத்த அணுக்களின் எண்ணிக்கை விரைவாக அதிகரிக்கும்.