Dharshana Quit Serial: சூப்பர் ஹிட் சீரியலில் இருந்து விலகிய கதாநாயகி? என்ன ஆச்சு ... அதிர்ச்சியில் ரசிகர்கள்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியலில் இருந்து, கதாநாயகி திடீரென விலகியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
சமீப காலமாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்கள், இல்லத்தரசிகளை கடந்து... இளம் ரசிகர்களையும் அதிகம் கவர்ந்து வருகிறது. காரணம் விறுவிறுப்பான, மற்றும் பரபரப்பான காட்சிகளுடன் புது புது கான்செப்டில் சீரியல்கள் எடுக்கப்படுவது தான்.
அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'கனா' சீரியலுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. திங்கள் முதல்.. சனிக்கிழமை வரை, மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த சீரியல் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. திறமைக்கும் ஆசைக்கும் தடை போட்டு தடுக்க முடியாது என்பதை நிரூபிக்கும் விதத்தில், இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
கிராமத்தில் ஏழை குடும்பத்தில் பிறந்து, அம்மா மற்றும் தாய்மாமனுடன் வளர்ந்து வரும் கதாநாயகி அன்பரசி தடகளத்துறையில் சாதிக்க வேண்டும் என்கிற ஆசையோடு போராடுகிறார். அவருக்கு உறுதுணையாக கதாநாயகன் இருக்க, அவரின் துணையுடன் தன்னுடைய கனவை எட்டிப் பிடிக்கிறாரா? இல்லையா என்பதே இந்த சீரியலின் கதைக்களம்.
இந்த சீரியலில் தர்ஷனா அசோகன் அன்பரசி என்கிற கதாபாத்திரத்தில் நடிக்க, விஷ்ணு உன்னிகிருஷ்ணன் விஷ்வா என்கிற கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்து வருகிறார். மேனும் தோசினி சேகர், அனன்யா என்கிற கதாபாத்திரத்தில் இரண்டாவது நாயகியாக நடித்து வருகிறார். 450 எபிசோடுகளை கடந்து, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று ஒளிபரப்பாகி வரும், இந்த தொடரில் இருந்து நடிகை தர்ஷனா அசோகன் திடீரென விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
காரால் வந்த பிரச்சனை.! விஜய் டிவி சீரியல் நடிகர் மகனை கடத்தி சரமாரியாக தாக்கிய சம்பவத்தால் பரபரப்பு!
என்ன காரணத்திற்காக தர்ஷனா சீரியலை விட்டு விலகுகிறார் என்பது பற்றிய தகவல் வெளியாகவில்லை. எனினும் ரசிகர்கள் அதிர்ச்சியுடன், விலகியதன் காரணம் குறித்து கேள்வி ஏழுப்பி வருகிறார்கள்.