MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ரத்னாவுக்காக பொங்கல் வைக்கும் பாக்கியம்.. சௌந்தரபாண்டி கொடுத்த ஷாக்! கோபத்தில் பரணி! அண்ணா சீரியல் அப்டேட்!

ரத்னாவுக்காக பொங்கல் வைக்கும் பாக்கியம்.. சௌந்தரபாண்டி கொடுத்த ஷாக்! கோபத்தில் பரணி! அண்ணா சீரியல் அப்டேட்!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி நகை போலீஸ் ஸ்டேஷனில் இருக்கலாம் என்று சந்தேகப்பட வைகுண்டமும் சண்முகமும் அதுக்கு வாய்ப்பில்லை என்று சொல்லி விட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.  

2 Min read
manimegalai a
Published : May 23 2024, 03:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

அதாவது, பாக்கியம் ரத்னா பிரின்சிபால் ஆனா முருகனுக்கு பொங்கல் வைப்பதாக வேண்டி கொண்டிருந்ததாக சொல்லி எல்லாரையும் பொங்கல் வைக்க செல்கிறாள். சௌந்தரபாண்டியிடம் நீங்க நல்லா இருக்கணும்னு வேண்டிகிட்டு பொங்கல் வைக்க போவதாக சொல்கிறாள். 

25

மறுபக்கம் பரணி ஹாஸ்பிடலில் இருக்க ஷண்முகம் அவளை விட்டு எங்கும் போகாமல் அங்கேயே இருக்க பரணி ஒரு டீ குடிக்க கூப்பிட்டா கூட வர மாட்ட, இப்போ என்ன இங்கேயே இருக்க என்று கேட்க அவன் ஒன்றும் இல்லனு சொல்ல பரணி அருவாளை தூக்கிட்டு என் அப்பாவை வெட்ட போய்டுவேன்னு பயமா என்று கேட்கிறாள். ஷண்முகம் அய்யய்ய அப்படியெல்லாம் இல்ல என்று சொல்கிறான். 

கார்த்திக்காக போட்டி போட்டு கிப்ட் வாங்கும் தீபா - ரம்யா! காத்திருக்கும் அதிர்ச்சி? கார்த்திகை தீபம் அப்டேட்!
 

35

மறுபக்கம் பாக்கியம் ஷண்முகத்தின் தங்கைகளை வர வைத்து கோவிலில் பொங்கல் வைத்து கொண்டிருக்க கோவிலில் வேலை செய்யும் கோபால் என்னம்மா பொங்கல் வைக்கறீங்க என்ன விஷயம் என்று கேட்க அவள் ரத்னாவுக்காக வைப்பதாக சொல்கிறாள். பிறகு சௌந்தரபாண்டி கோவிலில் கணக்கு வழக்குகளை பார்க்க வருகிறார். கோபால் அம்மா பொங்கல் வைக்க வந்திருக்காங்க என்று சொல்ல சௌந்தரபாண்டி எனக்காக தான பொங்கல் வைக்கிறா என்று சொல்கிறார். கோபால் அம்மா அப்படி சொல்லலையே என்று ரத்னா பற்றி சொல்ல சௌந்தரபாண்டி ஷாக் ஆகிறாள். 

45
Anna serial

Anna serial

திரும்பவும் கோபாலை அனுப்பி பாக்கியத்திடம் திரும்ப கேட்க சொல்லி சௌந்தரபாண்டி மறைந்து பார்க்க பாக்கியம் ரத்னாவுக்காக சொன்னதும் ஏன்டி என் வீட்டில இருந்துட்டு என்னை தோற்கடித்த குடும்பத்துக்கு பொங்கல் வைக்கறியா என்று பானையை எட்டி உடைத்து உடைக்கிறார். இங்கே ஒரு பெண்மணி காது அறுந்து ஹாஸ்பிடலுக்கு வர பரணி என்னாச்சு என்று கேட்க கோவிலில் வேலை செய்யும் கோபால் தான் என் புருஷன், குடிக்க காசு தரலைனு காதை அறுத்திட்டான் என்று சொல்கிறாள். 

நடிப்புக்காக காதலனை கழட்டி விட்டுட்டு... பிரபல நடிகருடன் வெளிநாடுகளில் டேட்டிங் செய்யும் 28 வயது நடிகையா இவர்?
 

55
Anna serial

Anna serial

இதே நேரத்தில் கனி போன் செய்து பரணியிடம் கோவிலில் நடந்த விஷயத்தை சொல்ல பரணி அந்த ஆளுக்கு இருக்கு என்று கோபத்துடன் கிளம்பி வருகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
அண்ணா (தொலைக்காட்சித் தொடர்)
தமிழ் சீரியல்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved