ரயில் டிக்கெட்டை நீண்ட வரிசையில் நின்று வாங்க தேவையில்லை.. ரயில்வே சொன்ன குட் நியூஸ்..
இப்போது ரயில் நிலையங்களில் QR குறியீட்டை ஸ்கேன் செய்து டிக்கெட்டுகளைப் பெறுங்கள். நீங்கள் நீண்ட வரிசையில் நிற்க வேண்டியதில்லை.

Railway Ticket
இனி ரயில் பயணிகள் டிக்கெட்டுகளைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை என்பதை உறுதிப்படுத்த, வடகிழக்கு ரயில்வே வசதிகளை அதிகரித்துள்ளது. 308 நிலையங்களில் யுடிஎஸ் (அன் ரிசர்வ்டு டிக்கெட் சிஸ்டம்) இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.
Railway Ticket Booking Service
24 நிலையங்களில் 75 பொது டிக்கெட் முன்பதிவு பணியாளர்களும், 261 நிலையங்களில் டிக்கெட் முன்பதிவு முகவர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 74 நிலையங்களில் ஏடிவிஎம்கள் நிறுவப்பட்டுள்ளன.
UTS Machines
இதுகுறித்து வடகிழக்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி பங்கஜ் குமார் சிங் கூறியதாவது: லக்னோ, வாரணாசி மற்றும் இசத்நகர் ஆகிய ரயில் நிலையங்களில் யுடிஎஸ் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/
Unreserved Ticket System
இதனால், பயணிகள் வரிசையில் நின்று டிக்கெட் எடுக்க வேண்டியதில்லை. மொபைலில் இருந்தும் UTS செயலி மூலம் டிக்கெட் புக் செய்வது எளிதாகிவிட்டது. இப்போது பயணிகள் ரயில் நிலையங்களில் நிறுவப்பட்டுள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் எளிதாக டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
Indian Railways
146 நிலையங்களில் க்யூஆர் கோட் வசதி செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை வழங்க 74 நிலையங்களில் 107 தானியங்கி டிக்கெட் விற்பனை இயந்திரங்களும் (ஏடிவிஎம்) நிறுவப்பட்டுள்ளன. 35 மையங்களில் பயணிகள் டிக்கெட் வசதி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்.. ஓலா ஸ்கூட்டரின் தாறுமாறான அம்சங்கள்..