Bad Luck Signs : உங்கள் வீட்டில் 'இந்த' மாதிரி சம்பவங்கள் நடந்தால் ஜாக்கிரதை... துரதிர்ஷ்டம் நடக்கும்..!
நம்முடைய வாழ்க்கையில் கஷ்டப்படப்போகிறோம் என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
இந்த உலகில் ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையும் ஒவ்வொரு விதமானது என்றே சொல்லலாம். சிலர் பிறக்கும் போதே கஷ்டத்தை அனுபவித்து, பிற்காலத்தில் நல்ல வாழ்க்கையை வாழ்வார்கள். இன்னும் சிலரோ பிறக்கும் போது எந்த வித கஷ்டத்தையும் அனுபவிக்காமல் பிற்காலத்தில் மோசமான வாழ்க்கையை வாழ்வார்கள். இது இயற்கை. ஆனால், சில சமயம் கிரக மாற்றத்தால் இந்த மாதிரி நடக்க வாய்ப்பு உண்டு தெரியுமா..?
ஆம்.. அதுதான் உண்மை.. மேலும் நம்முடைய வாழ்க்கையில் ஏதோ ஒரு மோசமான சம்பவம் நடக்க போகிறது என்றால், அதற்கான அறிகுறிகள் முன்கூட்டியே தெரியும் என்று ஜோதிடம் கூறுகிறது.. இப்போது அந்த அறிகுறிகள் என்னென்ன என்பதை பற்றி இக்கட்டுரையில் காணலாம்..
துளசி செடி கருகுவது: இந்து மதத்தில் துளசி புனிதமானதாக கருதப்படுகிறது. மேலும் இது லட்சுமி மற்றும் விஷ்ணுவின் வடிவமாகும். இப்படி இருக்கையில், வீட்டில் இருக்கும் துளசி செடி அடிக்கடி வாடினால், வீட்டில் கெட்ட விஷயங்கள் நடக்குமாம். எனவே, வீட்டில் துளசி செடி காய்ந்தால் உடனேயே ஒரு புதிய செடியை நடுவது நல்லது.
அடிக்கடி கண்ணாடி உடைவது: வீட்டில் இருக்கும் கண்ணாடி அல்லது கண்ணாடி பொருட்கள் உடைவது சகஜம் தான். ஆனால், இது அடிக்கடி நடந்தால் ஏதோ ஒரு கெட்ட விஷயம் நடக்கப்போகிறது என்று அர்த்தம். குறிப்பாக, வீட்டில் உடைந்த கண்ணாடித் துண்டுகள் அல்லது பாத்திரங்களை வைக்க வேண்டாம்.
இதையும் படிங்க: இந்த தேதியில் பிறந்தவர்களை சனி பகவான் ஆட்டிப்படைக்க போகிறார்.. 2024-ல் கவனமா இருங்க..
பூனை அழுவது: உங்கள் வீட்டைச் சுற்றி பூனை அழுதால் எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில், ஜோதிடத்தில் இது அசுபமாக பார்க்கப்படுகிறது. எந்த வீட்டில் பூனை அழுகிறதோ அந்த வீட்டில் மகிழ்ச்சியும் செழிப்பும் இருக்காது. அதுபோல், நீங்கள் நடந்து செல்லும் போது பூனை குறுக்கே வருவதும் அசுபம் ஆகும்.
இதையும் படிங்க: தூங்கும்போது இதை எல்லாம் பக்கத்தில் வைச்சுக்காதீங்க! துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்துமாம்!
தங்கம் காணாமல் போவது: சிலரது வீட்டில் வைத்த தங்கம் காணாமல் போய் பின், நீண்ட நாட்கள் கழித்து கிடைக்கும். ஒருவேளை அப்படி கிடைக்கவில்லை என்றால், அது துரதிர்ஷ்டத்தின் அறிகுறியாகும். இதனால் வருமானம் பாதிக்கப்படும். சாஸ்திரத்தின் படி, இப்படி நடந்தால், மகா லட்சுமி உங்கள் மீது கோபப்படுகிறாள் என்று அர்த்தம்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D