திருமண கோலத்தில்... கழுத்தில் தாலியோடு 'சிறகடிக்க ஆசை' சீரியல் நாயகி கோமதி பிரியா! வைரலாகும் போட்டோ!
'சிறகடிக்க ஆசை' சீரியல் நாயகி, கோமதி பிரியா கழுத்தில் தாலியோடு புகைப்படம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதே நேரம் சிலர் இது சீரியலுக்காக எடுக்கப்பட்டது என தெரியாமல் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான தொடர் 'சிறகடிக்க ஆசை'. டி ஆர் பி-யில் முதலிடத்தை தக்கவைத்து கொண்டுள்ள இந்த சீரியலில், கதாநாயகியாக நடித்து வருபவர் தான் கோமதி பிரியா. சோசியல் மீடியாவில் படு ஆகிட்டிவாக இருக்கும் இவர், திருமண கோலத்தில் புகைப்படம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
கோமதி பிரியா மதுரையில் பிறந்து வளர்ந்தவர். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்திருந்தாலும்... படிக்க வேண்டும், நல்ல வேலைக்கு போய் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்கிற ஏனாதால்.. சிறு வயதில் இருந்தே கிடைக்கும் வேலைகளை செய்து கொண்டு தான் தன்னுடைய பள்ளி படிப்பை முடித்தார்.
'லால் சலாம்' படத்தின் 21 நாள் ஃபுட்டேஜ் மிஸ்ஸிங்.! பகீர் கிளப்பிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! காரணம் யார்?
இதை தொடர்ந்து, கல்லூரியில் சேர பணம் இல்லை என்றாலும்... இவர் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கு அந்த கல்லூரியின் தாளாளரே ஸ்காலர்ஷிப் கொடுத்து இவரை ஊக்குவித்தார். படித்து முடித்த பின்னர் பெங்களூரில் வேலை கிடைத்தும், அங்கு செல்ல மனம் இல்லாமல், சென்னையில் ஒரு நிறுவனத்தில் நல்ல சம்பளத்திற்கு வேலைக்கு சேந்தார்.
எப்போதும் ஒரே மாதிரியான வேலையை செய்ய விரும்பாத இவர், வேலை செய்து கொண்டே... சீரியலில் நடிக்க வாய்ப்பு தேட துவங்கினார். அதன் படி வேலைக்காரன் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதை தொடர்ந்து தற்போது விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை சீரியலில் நாயகியாக நடித்து வரும் கோமதி பிரியா, மலையாளத்திலும் செம் பன்னீர் பூவு' என்கிற சீரியலில் ரேவதி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த சீரியலில் ரேவதிக்கு திருமணம் ஆகும் காட்சிகள் தான் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சீரியலுக்காக மணமகள் கெட்டப்பில், கழுத்தில் தாலியோடு எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த உண்மை தெரியாமல் தான் சிலர் உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா என கேட்டு... வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். விஷயம் தெரிந்தவர்கள் சீரியல் குறித்து கூறி கமெண்ட் செய்து வருகிறார்கள் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.