MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • வாஸ்து படி, வீட்டின் வடக்கு திசையில் இதையெல்லாம் வச்சா ஐஸ்வர்யம் பெருகுமாம்!

வாஸ்து படி, வீட்டின் வடக்கு திசையில் இதையெல்லாம் வச்சா ஐஸ்வர்யம் பெருகுமாம்!

வாஸ்து சாஸ்திரப்படி, வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருட்களின் திசையும் சரியாக இருந்தால், அந்த வீட்டில் உள்ளவர்கள் சுப பலன்களைப் பெறுகிறார்கள். ஒருவேளை, தவறான திசையில் வைத்தால், வாழ்க்கையில் எதிர்மறையான தாக்கத்தை பெறுவார்கள்.

1 Min read
Kalai Selvi
Published : May 23 2024, 10:14 AM IST| Updated : May 23 2024, 10:31 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரத்திற்கு என சிறப்பு முக்கியத்துவம் உண்டு. இதில் வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் சில விதிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், வாஸ்துவில் வடக்கு திசையின் முக்கியத்துவம் என்ன என்பதையும், வடக்கு திசையில் வைப்பதன் மூலம் ஒரு நபருக்கு பொருளாதார ரீதியாக என்னென்ன  நன்மைகள் கிடைக்கும் என்பதையும் பார்க்கலாம்.

25

வடக்கு திசையின் முக்கியத்துவம்: வாஸ்து சாஸ்திரத்தின் படி, எல்லா திசைகளுக்கும் அவற்றிற்கென சொந்த முக்கியத்துவம் உண்டு. ஆனால், வடக்கு திசையில் கடவுள்கள் வசிப்பதாக கருதப்படுவதால் இந்த திசை மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. குறிப்பாக, செல்வத்தின் கடவுளான குபேர் இந்த திசையில் வசிப்பதாக நம்பிக்கை உள்ளது. எனவே, இந்த திசையை வாஸ்து தோஷங்கள் இல்லாமல் வைத்திருந்தால், செல்வம் கிடைக்கும்.

35

வடக்கு திசையில் இவற்றை வையுங்கள்: வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டின் வடக்கு திசையில் கண்ணாடி வைத்தால், எதிர்மறை ஆற்றல் வீட்டிற்குள் வராது. அதுபோல, வீட்டின் சமையலறையும் வடக்கு திசையில் இருந்தால், உணவு மற்றும் பணம் எப்போதும் நிரம்பி வழியும். 
மேலும் வீட்டின் பிரதான நுழைவு வாயில் வடக்கில் இருந்தால்  மங்களகரமானதாக கருதப்படுகிறது.

45

இந்த செடிகளை வடக்கு திசையில் வையுங்கள்: வாஸ்துவில் மணி பிளாண்ட்க்கு அதிக முக்கியத்துவம் உண்டு. எனவே, இந்த செடியை வீட்டின் வடக்கு திசையில் வைத்தால், பொருளாதாரத்தில் லாபம் கிடைக்கும் மற்றும் வறுமை வீட்டை விட்டு விலகி ஓடும். அதுபோல, துளசி செடியையும், 
வீட்டின் வடக்கு திசையில் வைத்தால், வீட்டில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவுவது மட்டுமின்றி, தடைகள் நீங்கும்.  

 

55

இந்த சிலையை வடக்கு திசையில் வையுங்கள்: வடக்கு திசை செல்வத்தின் கடவுளான குபேரின் திசையாகக் கருதப்படுவதால், இந்த திசையில் குபேரனின் சிலையை வைத்தால், சுப பலன்களைப் பெறுவீர்கள். அதுமட்டுமின்றி, செய்யும்  தொழிலில் தொடர்ந்து முன்னேற்றம் காண்பீர்கள்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஜோதிடம்
வாஸ்து குறிப்புகள்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved