கமலின் பிடிவாதத்தால் தான் ஆளவந்தான் பிளாப் ஆனதா? பலரும் அறிந்திடாத ஷாக்கிங் சீக்ரெட்டை சொன்ன பிரபலம்
கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2001-ம் ஆண்டு ரிலீஸாகி தோல்வியை சந்தித்த ஆளவந்தான் திரைப்படம் பற்றி பலரும் அறிந்திடாத சீக்ரெட்டை பிரபலம் ஒருவர் கூறி இருக்கிறார்.
aalavandhan
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் டிரெண்ட் உருவாகி உள்ளது. பழைய படங்களை மீண்டும் வெளியிட்டு அதன் மூலம் நல்ல வசூலையும் ஈட்டி வருகின்றனர். அந்த வகையில் கமலின் வேட்டையாடு விளையாடு திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரீ-ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் சக்கைப்போடு போட்டதோடு மட்டுமின்றி பல கோடி வசூலை வாரிக்குவித்தது. இதனால் அடுத்தடுத்து பழைய படங்களை ரீ-ரிலீஸ் செய்து வருகின்றனர்.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01hh1ybtxjmxpgsjtn8rkc2kh8/befunky-collage--5-_300x171xt.jpg)
Aalavandhan Re Release
அண்மையில் கூட நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு ரிலீஸ் ஆன 3 திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. இப்படத்தை முதலில் தெலுங்கில் ரீ-ரிலீஸ் செய்தனர். அங்கு அமோக வரவேற்பு கிடைத்த நிலையில், தமிழிலும் இப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. முதலில் கமலா தியேட்டரில் மட்டும் இப்படத்தை ரீ-ரிலீஸ் செய்தனர். அங்கு ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியதை அடுத்து பிற திரையரங்கிலும் இப்படம் ரீ-ரிலீஸ் ஆகி உள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
aalavandhan Kamal
2012-ம் ஆண்டு வெளியான போது கலவையான விமர்சனங்களை பெற்ற 3 படம் தற்போது ரசிகர்களால் கொண்டாடப்படும் நிலையில், கடந்த 2001-ம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியாகி பிளாப் அன ஆளவந்தான் படம் தற்போது ரீ-ரிலீஸ் ஆகி உள்ளது. அன்றைய காலகட்டத்தில் ரசிகர்களுக்கு புரியாமல் போன இப்படம் இன்றைய கால இளைஞர்களை நிச்சயம் கவரும் என்கிற எதிர்பார்ப்பில் இப்படத்தை ஆயிரம் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்துள்ளார் தாணு.
Valaipechu anthanan
இந்த நிலையில், இப்படம் தோல்வி அடைந்தது ஏன் என்பது பற்றி வலைப்பேச்சு அந்தணன் பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார். அவர் கூறியதாவது : “ஆளவந்தான் ரிலீஸ் ஆன காலகட்டத்தில் அப்படம் யாருக்குமே புரியவில்லை. அதனால் அதற்கு பெரியளவில் வரவேற்பு கிடைக்கல. ஆனால் இன்றைய தலைமுறை ரசிகர்கள் இப்படத்தை புரிந்துகொள்வார்கள் என தாணு நம்புகிறார். பருத்திவீரன் பஞ்சாயத்து தான் ஆளவந்தானுக்கும் வந்தது. அன்றைக்கு ஓவர் பட்ஜெட்டை கமல் ஏற்றிவிட்டார். இதனால் மிகுந்த நஷ்டமும் அடைந்தார் தாணு.
அதைத்தாண்டி இப்படத்தை பெரிய நிறுவனம் தாங்கள் வாங்கி ரிலீஸ் செய்ய முன்வந்தனர். ஆனால் கமல் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தாணுவிடம் கொடுக்க வேண்டாம் என சொல்லியதோடு, நீங்களே தனித்தனியா ரிலீஸ் செய்தால் பெரிய தொகை வரும் என சொன்னாராம். இதனால் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்ததால் தான் தாணு அந்த சமயத்தில் கமலை கடுமையாக விமர்சித்தார். அதனால் தான் இன்றளவும் அவர்கள் இருவரும் பேசிக்கொள்வதில்லை என அந்தணன் கூறி உள்ளார்.
இதையும் படியுங்கள்... எவன் எப்படி போனா எனக்கென்ன... மிக்ஜாம் புயலால் 2 ரீல்ஸ் தேறுச்சு - ஷிவானியின் செயலால் கடுப்பான நெட்டிசன்கள்