Car Accident: கண்ணிமைக்கும் நேரத்தில் லாரி மீது கார் மோதல்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உடல் நசுங்கி பலி!
தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேரில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
car-truck collision
தெலங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டம் கொடடா தேசிய நெடுஞ்சாலையில் பழுது காரணமாக சாலையோரம் லாரி நின்றுக்கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக வந்த 10 பேருடன் வந்த கார் எதிர்பாராத விதமாக லாரியின் பின்புறத்தில் கார் பயங்கரமாக மோதியுள்ளது.
Telangana Car Accident
இதில், காரில் பயணம் செய்தவர்களில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: Sperm Count: விந்தணு எண்ணிக்கை, நீந்து சக்தியை அதிகரிக்க வேண்டுமா? அப்படினா இந்த உணவை சாப்பிட்டால் போதும்.!
Telangana Police
மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் உயிரிழந்தவர்கள் கம்மம் மாவட்டத்தை சேர்ந்த சந்தர்ராவ் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆந்திராவின் குணடலா அருகே உள்ள தேவாலயத்தில் முடி காணிக்கை செய்து திரும்பும் போதுத விபத்து நிகழ்ந்துள்ளது.
இதையும் படிங்க: மக்களே உஷார்.. இன்று நாளையும் இந்த 18 மாவட்டங்களில் வெப்ப அலை வீசுமாம்.. வானிலை மையம் டேஞ்சர் அலர்ட்!