பாக்சிங் மேடையாக மாறிய தமிழா தமிழா! புருஷன்களை துவைத்து எடுத்த பெண்கள், இதெல்லாம் ஒரு காரணமா?
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிறு அன்று மதியம் 12:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி தமிழா தமிழா. ஆவுடையப்பன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சரி இந்த வாரம் நடந்த சுவாரஸ்யமான டாப்பிக் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க.
'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விதமான மாறுபட்ட தலைப்பை தேர்வு செய்து விவாதம் செய்து வருகின்றனர், அந்த வகையில் இந்த வாரம் மனைவிகள் ஒரு பக்கமும் அவர்களது கணவர்கள் ஒரு பக்கம் என்று விவாதத்தில் ஈடுபட உள்ளனர். யார் முதலில் சண்டை போடுவது? யார் சமாதானம் செய்வது? கணவன்களை அடிக்க பயன்படுத்தும் ஆயுதங்கள் என்ன என்று பல கேள்விகளுடன் இந்த விவாத நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதற்கான அடுத்தடுத்த ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதில் ஒரு ப்ரோமோ வீடியோவில் ஏதாவது ஒரு காரணத்திற்காக கணவனை தண்டிப்பது போன்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு பெண் முன்ன எல்லாம் பேசுனா தேன் மாதிரி இருக்குனு சொல்வ ஆனால் இப்போ காதுல ரத்தம் வருதுன்னு சொல்ற என்று கணவரை கும்மாங்குத்து குத்துகிறார்.
இன்னொரு பெண் லவ் பண்ணும் போது எந்த ட்ரெஸ் போட்டாலும் வாவ் சொல்லுவ, ஆனால் இப்போ கண்டுக்க கூட மாட்டுற என்று அடிக்க அப்போ எப்பயாச்சும் தான் உன்னை பார்ப்பேன், ஆனால் இப்போ எப்பவுமே பார்க்கிறேன் என்று பதில் கொடுக்க கல்யாணம் ஆகிநாலு மாசம் கூட ஆகல என்று திட்ட அந்த நாலு மாசமா நான் படுற பாடு எனக்கு தான் தெரியும் என்று பதில் கொடுக்க அதுக்கும் ஒரு கும்மாங்குத்து விழுகிறது.
இன்னொரு பெண் லவ் பண்ண தொடங்கியதில் இருந்து இப்போ வரைக்க்கும் எனக்காக செலவு பண்ண டிடைல்ஸை எக்ஸெல் ஷீட்ல போட்டு வச்சிருக்க, முதலில் அதை டெலீட் பண்ணு என்று ஒரு குத்து குத்த ஆவுடையப்பனே அரண்டு போகிறார். ஆனாலும் கல்யாணமான ஆம்பளைங்க பாவம் தான்.. என்று பலர் இந்த ப்ரோமோ வீடியோ குறித்து கமெண்ட் அடித்து வருகின்றனர்.