காதலால் இதயங்களை வென்ற என் ஓமனா... ஜோதிகாவின் 'காதல் தி கோர்' படம் பார்த்து சிலாகித்து பேசிய சூர்யா
ஜோதிகா, மம்முட்டி நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் காதல் தி கோர் படத்தை பார்த்து அதுகுறித்த தன் விமர்சனத்தை பதிவிட்டுள்ளார் சூர்யா.
suriya about kaathal movie
நடிகர் சூர்யாவின் மனைவி ஜோதிகா, திருமணத்துக்கு பின்னர் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தொடர்ந்து தேர்வு செய்து நடித்து வருகிறார். அவரின் அந்த பட்டியலில் லேட்டஸ்டாக இணைந்துள்ள திரைப்படம் தான் காதல் தி கோர். மலையாளத்தில் ஜோ பேபி இயக்கத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக ஜோதிகா நடித்த இத்திரைப்படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது.
mammootty, jyothika
மலையாளத்தில் தி கிரேட் இந்தியன் கிச்சன் என்கிற படத்தை கொடுத்து இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தவர் தான் ஜோ பேபி. அப்படத்தின் வெற்றிக்கு பின்னர் அவர் இயக்கத்தில் வெளியாகும் படம் இது என்பதால், காதல் தி கோர் படத்துக்கு கேரளா மட்டுமின்றி இந்தியா முழுவதும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்து வந்தது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Kaathal - The Core
ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையிலும், சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் காதல் தி கோர் திரைப்படம் அமைந்துள்ளதால், இப்படத்திற்கு பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளது. சினிமா பிரபலங்களும் காதல் தி கோர் படத்தை பார்த்து வியந்து பாராட்டி வருகின்றனர். நேற்று நடிகை சமந்தா, இது இந்த ஆண்டின் சிறந்த படமாக இருக்கிறது என பாராட்டி இருந்தார். இந்த நிலையில், நடிகர் சூர்யாவும் தற்போது காதல் தி கோர் படத்தை பாராட்டி பதிவிட்டுள்ளார்.
kaathal the core review by suriya
இதுகுறித்து அவர் கூறி இருப்பதாவது : “அழகான மனம் கொண்டவர்கள் ஒன்றிணைந்தால் தான், காதல் தி கோர் போன்ற திரைப்படங்கள் கிடைக்கும். மம்முட்டி அவர்களின் நல்ல சினிமா மீதான காதலுக்கும் உத்வேகத்துக்கும், இப்படி ஒரு அருமையான படத்தை கொடுத்த படக்குழுவுக்கும் தலைவணங்குகிறேன். ஜோ பேபியின் இயக்கத்தில் அமைதியான காட்சிகள் கூட பெரிய அளவில் பேசின, எழுத்தாளர்கள் ஆதர்ஷ் சுகுமாறன் மற்றும் பால்சன் ஆகியோர் இந்த உலகத்தை நமக்கு காட்டியதற்காக நன்றி! மேலும் காதல் என்னவாக இருக்கும் என்பதைக் காட்டி அனைத்து இதயங்களையும் வென்றதற்காக என் ஓமனா ஜோதிகாவுக்கு வாழ்த்துக்கள்” என நெகிழ்ச்சி உடன் பதிவிட்டுள்ளார் சூர்யா.
இதையும் படியுங்கள்... சொதப்பிய கார்த்திக்கின் பிளான்... எஸ்கேப் ஆன தீபா - கார்த்திகை தீபம் சீரியலில் செம்ம டுவிஸ்ட் வெயிட்டிங்