S. J. Surya: SJ சூர்யாவுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு...என்ன பிரச்சனை தெரியுமா..?
Court order for S. J. Surya: பிரபல நடிகர் எஸ்.ஜே. சூர்யா வருமான வழக்கை எதிர் கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
sjsurya
எஸ். ஜே. சூர்யா, இயக்குநர் என்பதை தாண்டி நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முக திறமை கொண்டவர் . ‘வாலி, குஷி’ மாதிரியான படங்களை இயக்கியத்தின் மூலம் ஒரு சிறந்த இயக்குநர் என்பதை தமிழ் சினிமாவிற்கு நிரூபித்து காட்டியவர். இவர் நடிப்பில் வெளியான நியூ, நண்பன், இறைவி போன்ற படங்கள் இவருக்கு பாசிடிவ் விமர்சனங்களை பெற்று தந்தது.
sjsurya
ஆரம்பத்தில், ஹீரோ, காமெடி வேடங்களில் நடித்து வரவேற்பை பெற்ற எஸ்.ஜே.சூர்யா, அடுத்தடுத்து வில்லன், கவுரவ தோற்றம் என அடுத்தடுத்து எந்த விதமான கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை சிறப்பாக செய்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.
sjsurya
'ஸ்பைடர்' படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் இவரின் வில்லத்தனம் வெறித்தனமாக இருக்கும். இதையடுத்து, அடுத்தடுத்து வில்லன் வேடங்களில் நடித்து வந்தார். அட்லீ இயக்கத்தில் வெளியான மெர்சல் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து அசத்தினார். இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மாநாடு படத்தில் தனுஷ்கோடி என்கிற வில்லன் கதாபாத்திரத்தில் பட்டையை கிளப்பி இருந்தார்.
sjsurya
மாநாடு படத்தில், சிம்புவைப் போல் இவரது கதாபாத்திரமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மாநாடு படத்தில் இவரின் நடிப்பு திறமை மிகவும் பாராட்டை பெற்று தந்த நிலையில், இவர் தற்போது சிவகார்த்திகேயனுடன் இணைந்து டான் படத்தில் கட்சிதமாக வில்லத்தனத்தை வெளிப்படுத்தி ஒரு கலக்கு கலக்கி இருந்தார்.
sj suriya
மேலும், பிரபல இயக்குநர் எஸ். ஜே. சூர்யா 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயக்குநராக அவதாரம் எடுத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த நிலையில், நடிகர் எஸ்.ஜே. சூர்யா வருமான வழக்கை எதிர்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
sj suriya
தனக்கு எதிரான வருமான வரி வழக்குகளை ரத்து செய்யக் கோரி எஸ்.ஜே. சூர்யா வழக்கு தொடர்ந்தார். வழக்கில் ''பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனாலும், வருமான வரி தாக்கல் செய்யவில்லை. இதனால், வழக்குகளை கண்டிப்பாக எதிர்கொள்ள வேண்டும்'' என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.