Nadhaswaram Re-Union: 9 வருடங்களுக்கு பின் சந்தித்து கொண்ட சன் டிவி நாதஸ்வரம் சீரியல் நடிகைகள்! வைரல் போட்டோஸ்
'நாதஸ்வரம்' சீரியலில் நடித்த நடிகைகள், சுமார் 9 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் சந்தித்தபோது எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குறிப்பிட்ட சீரியல்கள் எப்போதுமே ரசிகர்கள் மனதில், நீக்காத இடத்தை பிடித்துவிடும். அந்த வகையில் இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான நாதஸ்வரம் சீரியலும் ஒன்று.
புதுமையான கதைக்களம் இல்லை என்றாலும், தங்கைகள் மீது அண்ணன் எந்த அளவுக்கு பாசமாக இருக்கிறார். அவர்களுக்காக தன்னுடைய வாழ்க்கையையே தியாகம் செய்ய துணிகிறார் என ஒவ்வொரு காட்சியையும் உணர்வு பூர்வமாக இயக்கியது மட்டும் இன்றி இந்த சீரியலில் கோபி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் திருமுருகன்.
இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் சந்திரமௌலி, பூவிலங்கு மோகன், ஸ்ரித்திகா, ஜெயந்தி நாராயணன், தேனீ சத்தியபாமா, ரேவதி தமோதிரன், ஜெயஸ்ரீ, ஸ்ருதி ஷண்முக பிரியா, சங்கவி, சிந்து, சுதா பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்நிலையில் இந்த சீரியல் நிறைவடைந்த பின்னர், இந்த சீரியலில் நடித்த ஒரு சிலரை மட்டுமே அடுத்தடுத்த சீரியலில் பார்க்க முடிந்தது... மற்றவர்கள் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விட்டனர்.
ஸ்ரீதேவி முதல்... அமலா பால் வரை! திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான முன்னணி தமிழ் நடிகைகள் இத்தனை பேரா?
இந்நிலையில் சுமார் 9 வருடங்கள் கழித்து, நாதஸ்வரம் சீரியலில் அக்கா - தங்கைகளாக நடித்த நடிகைகள் மீண்டும் ரீயூனியன் நடத்தி, ஒருவரை ஒருவர் சந்தித்து மகிழ்ந்துள்ளனர். இதுகுறித்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.