Anna Serial: புடவையை வைத்து பிளான் போடும் சௌந்தரபாண்டி! ஷண்முகத்திடம் பம்மிய முத்துப்பாண்டி.. நடக்க போவது என்ன
ஒரே நிறத்தில் அனைவருக்கும் புடவை எடுக்க வைத்து, சௌந்தரபாண்டி.. ஷண்முகத்தை கவுக்க பிளான் போடும் நிலையில், அது நிறைவேறுமா என்பதை இன்றய எபிசோடில் பார்ப்போம்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி பாக்கியத்திடம் உன் அண்ணன் பொண்ணுங்களை கூட்டிட்டு வா என்று சொல்லிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, கவிதாவும் பாக்கியமும் பரணியை கூப்பிட்டு கொண்டு செல்வதற்காக ஷண்முகம் வீட்டிற்கு வருகின்றனர். பரணியை கூப்பிடுவது மட்டுமின்றி சண்முகத்தின் நான்கு தங்கைகளையும் கூப்பிட ஷண்முகம் முதலில் தயங்குகிறான், இருப்பினும் அனுப்பி வைக்க முடிவெடுக்க கவிதா நீங்களும் வாங்க அண்ணே என்று சொல்ல எல்லாரும் சௌந்தரபாண்டி வீட்டிற்கு கிளம்பி செல்கின்றனர்.
Anna serial
சௌந்தரபாண்டி வீட்டில் அமோக வரவேற்பு கொடுக்க முத்துப்பாண்டி ஷண்முகத்திடம் தன்மையாக பேச ஷண்முகம் சந்தேப்படுகிறான், இப்போ தான் எனக்கு கல்யாணம் ஆக போதே, இன்னமும் எதுக்கு பகை என்று பேச சௌந்தரபாண்டி நாம நிறைய பாவம் பண்ணி இருக்கோம், எல்லாருக்கும் சேர்த்து புடவை எடுத்து கொடுக்கலாம் என்று சொல்கிறார்.
ஏற்கனவே புடவையுடன் வந்த கடைக்காரர் புடவைகளை காட்ட தொடங்க சௌந்தரபாண்டி முத்துபாண்டியிடம் எல்லாருக்கும் ஒரே மாதிரி புடவை எடுக்க சொல்லு. அப்போ தான் நம்ம பிளானை க்ரெக்கா நடத்த முடியும் என திட்டத்தை சொல்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.