தாய், மனைவியை அடக்கம் செய்த அதே இடத்தில் மகளின் உடலை அடக்கம் செய்யும் இளையராஜா..!
மறைந்த பின்னணி பாடகி பவதாரிணியின் உடல் தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் இறுதி அஞ்சலிக்கு வைக்கப்பட்டு இன்று காலை நல்லடக்கம் செய்யப்படுகிறது.
Ilayaraja Daughter Bhavatharini
கடந்த சில மாதங்களாக கல்லீரல் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த பவதாரிணிக்கு ஆயுர்வேத முறையில் இலங்கையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் நேற்று ஜனவரி 25ஆம் தேதி மாலை சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவரது மறைவு ஒட்டுமொத்த திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. இதனையடுத்து அவரது உடல் இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.
Singer Bhavatharini
பின்னர், சென்னை தி. நகரில் உள்ள இசைஞானி இளையராஜா இல்லத்திற்கு பவதாரிணி உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு பவதாரிணியின் உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், நடிகர்கள் சிவகுமார், ராமராஜன், விஷால், கார்த்தி, சிம்பு, விஜய் ஆண்டனி மற்றும் ஏராளமான பொதுடக்களும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
bhavatharini funeral
பொதுமக்கள் அஞ்சலியை தொடர்ந்து, பவதாரிணியின் உடல் நேற்று இரவு அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைப்புரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு பவதாரிணியின் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு முல்லைப் பெரியாற்றங்கரையில் உள்ள இளையராஜாவின் பண்ணைவீட்டில் இளையராஜாவின் தாய் சின்னத்தாயி, மனைவி ஜீவா ஆகியோர், அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பவதாரிணியின் உடல் இன்று நண்பகலில் அடக்கம் செய்யப்பட உள்ளது.