Gayathri : "வீட்டில விசேஷம்".. வளசரவாக்கம் வீட்டை Upgrade செய்யும் காயத்திரி யுவராஜ் - வைரலாகும் போட்டோஸ்!
Gayathiri Yuvaraj : சென்னையில் பிறந்து வளர்ந்த பிரபல சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ், ஏற்கனவே வளசரவாக்கத்தில் கட்டியுள்ள தனது வீட்டில் புதிய Upgrade ஒன்றை செய்ய உள்ளார்.
yuvaraj master
சென்னையில் கடந்த 1988ம் ஆண்டு பிறந்தவர் தான் காயத்ரி யுவராஜ். சிறுவயது முதலே நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக கடந்த 2009 ஆம் ஆண்டு ஒளிபரப்பான "தென்றல்" என்கின்ற நாடகத்தின் மூலம் தனது கலைப் பயணத்தை தொடங்கினார்.
Pizza 4: 'பீட்சா 4' படத்தில் ஹீரோவான நாசர் மகன் அபி ஹாசன்... ஹீரோயின் இந்த பிக்பாஸ் பிரபலமா?
Gayathri
அதனைத் தொடர்ந்து "அழகி", "பொன்னூஞ்சல்", "மோகினி", "களத்து வீடு", "பிரியசகி", "மெல்ல திறந்தது கதவு", "சரவணன் மீனாட்சி", "அரண்மனை கிளி", "சித்தி 2" மாற்றும் "நாம் இருவர் நமக்கு இருவர்" என்று தொடர்ச்சியாக பல்வேறு நாடகங்களில் பிஸியான நாயகியாக நடித்து வருகிறார். இவருக்கும் பிரபல நடன இயக்குனர் யுவராஜ் அவர்களுக்கும் திருமணம் நடந்து முடிந்த நிலையில் 13 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளார்.
yuvaraj
கடந்த 2023 ஆம் ஆண்டு இந்த தம்பதிக்கு அடுத்ததாக ஒரு பெண் குழந்தை பிறந்த நிலையில், அந்த பெண் குழந்தை பிறந்த 4 மாதத்தில் வளசரவாக்கத்தில் ஒரு வீட்டை கட்டினார்கள் காயத்திரி மற்றும் யுவராஜ். இந்நிலையில் இந்த 2024 ஆம் ஆண்டு அந்த வீட்டின் மேல் தளத்தை நீட்டிக்கும் பணியை அவர்கள் தொடங்கியுள்ளனர். இது குறித்த ஒரு பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காயத்திரி வெளியிட்டுள்ளார்.