கணவன் மீது கம்பளைண்ட்டோடு வந்த மருமகள்கள்! பிள்ளைக்காக மல்லு கட்ட போகும் மாமியார்கள் - தமிழா தமிழா ப்ரோமோ!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் மதியம் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி தமிழா தமிழா. ஆவுடையப்பன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விதமான டாப்பிக்கை தேர்வு செய்து விவாதம் செய்து வருகின்றனர். 
 

First Published Apr 5, 2024, 9:06 PM IST | Last Updated Apr 5, 2024, 9:06 PM IST

கடந்த வாரம் கணவன் மனைவிக்குள் உருவாகும் சண்டை குறித்த விவாதம் நடைபெற்றது. முதலில் சண்டையை தொடங்குவது யார்? கணவனை தாக்க பெண்கள் பயன்படுத்தும் ஆயுதம் என்ன என்று விவாதம் செய்தனர். குறிப்பாக தனது கணவனை குழந்தையாக பார்த்துக்கணும், ஏழேழு ஜென்மத்துக்கும் பார்த்துக்கணும் என்னவன் அவன் என்று பேசிய வீடியோ கிளிப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. 

இதனை தொடர்ந்து இந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் மருமகள்களும் மாமியாரும் நேருக்கு நேராக விவாதத்தில் ஈடுபட உள்ளனர், இது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் மருமகள்கள் தன்னுடைய கணவனுக்கு இது கூட சரியா தெரியல, அவங்க அம்மா சரியா வளர்க்கல என்று புகார்களை அடுக்க மாமியார்கள் அதுக்கு பதில் கொடுக்க உள்ளனர். 

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது, இதனால் இந்த வாராம் சிறப்பான சம்பவம் காத்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Video Top Stories