Sandhya Raagam: ஜோதிடர் கொடுத்த அதிர்ச்சி.. அம்மாவுக்கு சீனு செய்து கொடுத்த வாக்கு - சந்தியா ராகம் அப்டேட்!
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மாயா சீனுவை சந்தித்து பேசிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது மாயா மொட்டை மாடியில் இருக்க சீனுவை வீட்டிற்கு அழைத்து வருகின்றனர். அவனுக்கு ஆரத்தி எடுத்து உள்ளே கூட்டி வருகின்றனர். பத்மா, பார்வதி, ஷாரு ஆகியோர் இனிமே மாயாவையும் சீனுவையும் நெருங்க விட கூடாது என்று முடிவெடுக்கின்றனர்.
மேலும் ஒரு ஜோதிடரை பார்க்கவும் முடிவெடுக்கின்றனர், மறுநாள் ஜோதிடரை சந்திக்கின்றனர், ஜோதிடர் சீனு ஜாதகத்தை பார்த்து விட்டு நல்ல ஜாதகம் எல்லாமே கை கூடி வரும் என்று சொல்கிறார். ஆனால் எதுவுமே அப்படி நடக்கவில்லை என்று சொல்ல ஜோதிடர் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணோட ஜாதகத்தை கேட்க ஷாருவின் ஜாதகத்தை கொடுக்கின்றனர்.
Desingu Periyasamy: இயக்குனர் தேசிங்கு பெரியசாமியிடம் பண மோசடி! காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்.!
இந்த இரண்டு ஜாதகத்துக்கு சுத்தமா பொருத்தம் இல்ல, நீங்க என்ன தான் முயற்சி பண்ணாலும் இந்த கல்யாணம் நடக்காது என்று அதிர்ச்சி கொடுக்கிறார் ஜோதிடர். இதனையடுத்து இவர்கள் மூவரும் வீட்டிற்கு வர ஜானகி அணையா தீபத்துக்கு பூஜை செய்து கொண்டிருக்க மாயா தனம் ஆகியோர் காலேஜ் கிளம்பி வருகின்றனர்.
சிவராமன் மாயாவை பவானியுடன் காலேஜ் போக சொல்கிறார். தனத்தை நான் கூட்டி போறேன், இன்னைக்கு சீனு ரெஸ்ட் எடுக்கட்டும் என்று சொல்கிறார். அடுத்து மணிவண்ணனும் சீனுவும் பத்மாவை ஹாஸ்பிட்டல் அழைத்து வர டாக்டர் பிபி ரொம்ப அதிகமாக இருக்கு, வீட்டில் நடப்பதை எல்லாம் பெருசாக யோசிக்காதீங்க என்று சொல்லி அனுப்புகிறார்.
சீனு என்ன பிரச்சனை என்று கேட்க பத்மா ஜோதிடர் சொன்னதை சொல்ல இந்த கல்யாணம் நடக்கும், கவலைப்படாதீங்க என்று ஆறுதல் சொல்கிறான், இந்த கல்யாணம் நடக்கலனா உன் மாமாவோட கௌரவமே போய்டும் என்று போய் விடும் என்று சொல்ல சீனு கண்டிப்பாக நடக்கும் எந்த பிரச்னையும் வராது என்று வாக்கு கொடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சந்தியா ராகம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.