மதுரையில் தடபுடலாக நடைபெற்ற ரோபோ சங்கர் மகள் திருமணம்... தாய்மாமனை கரம்பிடித்தார் இந்திரஜா...!
நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவின் திருமணம் மதுரையில் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
Indraja Robo Shankar Wedding
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் மிமிக்ரி கலைஞராக அறிமுகமாகி பின்னர் அது இது எது நிகழ்ச்சியில் தன்னுடைய காமெடிகளால் ரசிகர்களை மகிழ்வித்து பேமஸ் ஆனவர் ரோபோ சங்கர். பின்னர் சினிமாவிலும் ரோபோ சங்கருக்கு அடுத்தடுத்து காமெடியனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு தாவிய அவர், தற்போது பிசியான நடிகராகவும் திகழ்ந்து வருகின்றார்.
Indraja karthik Wedding
நடிகர் ரோபோ சங்கருக்கு பிரியங்கா என்கிற மனைவி உள்ளார். இந்த ஜோடிக்கு இந்திரஜா என்கிற மகள் இருக்கிறார். இவரும் தந்தையை போல் சினிமாவில் கலக்கி வருகிறார். விஜய்யின் பிகில் படத்தில் பாண்டியம்மா என்கிற சிங்கப்பெண் கேரக்டரில் நடித்து அசத்திய இந்திரஜா, அடுத்ததாக முத்தையா இயக்கத்தில் கடந்த 2022-ம் ஆண்டு வெளிவந்த விருமன் படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்து அசத்தினார்.
இதையும் படியுங்கள்... சென்னையில் ரசிகர்களுடன் மஞ்சும்மல் பாய்ஸ் படம் பார்த்து Vibe ஆன எம்.எஸ்.தோனி - வைரலாகும் வீடியோ
Robo Shankar daughter Wedding
இதனிடையே நடிகை இந்திரஜாவுக்கும் அவரது தாய்மாமா கார்த்திக் என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நிச்சயம் ஆனது. இந்தநிலையில், இன்று மதுரையில் இந்திரஜா - கார்த்திக் ஜோடியின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. தாலி கட்டியதும் ஆனந்தக் கண்ணீர் சிந்திய இந்திரஜாவை குடும்பத்தினர் ஆறத்தழுவி வாழ்த்து தெரிவித்தனர். இந்த திருமணத்தில் நடிகர் சூரி உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
Indraja Robo Shankar Marriage
இந்திரஜாவின் கணவர் கார்த்திக், தொடர்வோம் என்கிற அறக்கட்டளையை நடத்தி வருகிறார். அதுமட்டுமின்றி இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரது திருமணம் மதுரையில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ள நிலையில், விரைவில் சென்னையில் நடைபெற உள்ள இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திரைத்துறையினர் ஏராளமானோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... ஜிகிரிதோஸ்த் ஆக இருந்த இளையராஜா - வைரமுத்து... பரம எதிரிகள் ஆனது ஏன்? 38 ஆண்டுகால பிரிவின் பின்னணி!