Prabhas: பிரபாஸுக்கு என்ன ஆச்சு... உடல்நல பிரச்சனையால் நடிப்புக்கு திடீர் பிரேக்! தீயாய் பரவும் தகவல்!
நடிகர் பிரபாஸ் தன்னுடைய நடிப்புக்கு சிறு பிரேக் கொடுக்க உள்ளதாகவும், உடல்நல பிரச்சனையால் அவதிப்பட்டு வருவதே இதற்கான காரணம் என டோலிவுட் திரையுலகில் ஒரு தகவல் தீயாக பரவி வருகிறது.
Prabhas Stunt Double Salary
பாகுபலி படத்தின் வெற்றிக்கு பின்னர், உலக அளவில் கவனிக்கப்படும் நட்சத்திரமாக மாறிய பிரபாஸ், தொடர்ந்து பிக்பட்ஜெட் மற்றும் பான் இந்தியா படங்களில் மட்டுமே நடிக்க விரும்புகிறார். அந்த வகையில் இவர் பாகுபலி படத்திற்கு பின் நடித்த சாஹே, ஆதிபுருஷ், ராதே ஷியாம் ஆகிய படங்கள் பான் இந்தியா படமாக வெளியாகி, விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் தோல்வியை தழுவியது.
தொடர் தோல்வி படங்களை கொடுத்தாலும், துவண்டு விடாமல்... தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் பிரபாஸ் கவனம் செலுத்தி வந்தார. இந்நிலையில் சமீபத்தில் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் , பிரபாஸ் நடித்த, 'சலார்' திரைப்படம் நல்ல விமர்சனங்களுடன்... வசூலிலும் வெற்றி பெற்றது. திரையரங்கில் மட்டும் இல்லாமல், ஓடிடி தளத்திலும் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது.
'சலார்' படத்திற்கு பின்னர், பிரபாஸ் 'கல்கி' படத்தில் நடித்து வந்த நிலையில், சமீபத்தில் தான் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்தார். இதை தொடர்ந்து மாருதி இயக்கத்தில் ராஜாசாப் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அதே போல் அனிமல் பட இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் 'ஸ்பிரிட்' என்கிற படத்திலும் கமிட் ஆகி உள்ளார்.
மேலும் சாலார் 2 பாகத்தின் கதையை பிரசாத் நீல் முடித்த பின்னர்... இந்த படத்திலும் நடிக்க இருந்தார். இப்படி ஓய்வில்லாமல் நடிக்க பல படங்கள் பிரபாஸ் கைவசம் உள்ள நிலையில், பிரபாஸ் தன்னுடைய உடல் நலனை கருத்தில் கொண்டு, சினிமாவுக்கு சிறு பிரேக் விட போவதாக ஒரு தகவல் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.
சமீபத்தில் பிரபாஸுக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதனால் ஏற்பட்ட வலி இன்னும் சரியாகாத நிலையில், அவர் தொடர்ந்து அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. எனவே சில நாட்கள் ஓய்வெடுக்கும் முடிவில் பிரபாஸ் இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி தனது உடற்தகுதியை மேம்படுத்தி தோற்றத்தை மாற்றவும் பிரபாஸ் திட்டமிட்டுள்ளாராம். இது போன்ற காரணங்களுக்காக சமந்தா பாணியில் ஒரு பிரேக் எடுக்க உள்ளதாக கூறப்பட்டாலும்... இதுவரை பிரபாஸ் தரப்பில் இருந்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.