கோலிவுட் சீக்ரட்ஸ்... இந்திய சினிமா வரலாற்றிலேயே முதன் முதலில் ரூ.1 கோடி சம்பளம் வாங்கியது இந்த தமிழ் நடிகையா?
அதிக சம்பளம் வாங்கும் சினிமா பிரபலங்கள் பட்டியலில் ஆண்களே ஆதிக்கம் செலுத்திய காலகட்டத்தில் முதல் ஆளாக ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய நடிகை பற்றி பார்க்கலாம்.
First Indian Actress Who got 1 Crore Salary
2010-ம் ஆண்டுக்கு முன்பு வரை இந்திய சினிமா என்பது ஆணாதிக்கம் நிறைந்ததாக இருந்தது. அதன்பின்னர் தான் பெண்களை முன்னிலைப்படுத்தி ஏராளமான படங்கள் படிப்படியாக உருவாகத் தொடங்கி, இன்று நடிகர்களுக்கு இணையாக நடிகைகளுக்கும் மார்க்கெட் உருவாகி இருக்கிறது. இதனால் நடிகைகளின் சம்பளமும் நடிகர்களுக்கு நிகராக தொடர்ந்து உயர்ந்த வண்ணம் இருக்கிறது.
Sridevi
ஆனால் முன்பெல்லாம் நடிகைகளுக்கு படங்களில் பெரியளவில் ஸ்கோப் இருக்காது. அப்படி இருந்தாலும் அவர்களுக்கு நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வழங்கப்படமாட்டாது. தற்போது ஒரு படம் ஹிட் ஆனாலே நடிகர்கள் தங்கள் சம்பளத்தை கோடிகளில் உயர்த்திவிடுகின்றனர். ஆனால் முன்பெல்லாம் ஒரு கோடி சம்பளம் வாங்க வேண்டும் என்பது பல நடிகர், நடிகைகளின் கனவாகவே இருந்து வந்தது.
Tamil Actress Sridevi
தமிழ் சினிமாவிலே ரஜினி, கமல்ஹாசன் போன்ற ஜாம்பவான் நடிகர்கள் இருந்தாலும், முதன்முதலில் ஒரு கோடி சம்பளம் வாங்கிய நடிகர்கள் பட்டியலில் அவர்களால் இடம்பிடிக்க முடியவில்லை. ஏனெனில் அவர்களுக்கு முன்னதாகவே நடிகர் ராஜ்கிரணுக்கு தான் முதன்முதலில் ரூ.1 கோடி சம்பளமாக வழங்கப்பட்டது. அதன் பின்னர் தான் ரஜினி, கமல் போன்ற உச்ச நடிகர்களால் அந்த உயரத்தை எட்ட முடிந்தது.
இதையும் படியுங்கள்... நூறு ஆண்டு உன்னோடு... வாழவேண்டும் மண்ணோடு! முத்தமழை பொழிந்த நயன் - விக்கி ஜோடியின் ரொமாண்டிக் கிளிக்ஸ் இதோ
Sridevi Salary
இதேபோல் இந்திய சினிமா வரலாற்றிலேயே நடிகைகளில் முதன்முதலில் ரூ.1 கோடி சம்பளம் வாங்கியது ஒரு தமிழ் நடிகை என்று சொன்னால் நம்ப முடிகிறதா. ஆனால் அது தான் உண்மை. தமிழ்நாட்டில் மீனம்பட்டி என்கிற குக் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் தான் ஸ்ரீதேவி. இவர் 1980-களில் தமிழ் சினிமா மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, மலையாளம் என பான் இந்தியா நாயகியாக கோலோச்சி வந்தார்.
Sridevi 1 crore salary
அந்த காலகட்டத்தில் தான் ஸ்ரீதேவிக்கு ரூ.1 கோடி சம்பளம் வழங்கப்பட்டு இருக்கிறது. அதுவும் இந்தி படம் ஒன்றிற்காக ரூ.1 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறார் ஸ்ரீதேவி. இதன்மூலம் இந்திய சினிமா வரலாற்றிலேயே முதன்முறையாக ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய நடிகை என்கிற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார் ஸ்ரீதேவி.
Sridevi got more salary than rajinikanth
நடிகை ஸ்ரீதேவியை தமிழில் முதன்முதலில் ஹீரோயினாக அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் கே.பாலச்சந்தர். அவர் இயக்கிய மூன்று முடிச்சு படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான ஸ்ரீதேவி, அப்படத்தில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் உடன் இணைந்து நடித்திருந்தார். அப்படத்தில் நடித்த போது நடிகர் ரஜினிகாந்துக்கு வெறும் ரூ.2 ஆயிரம் மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டது. ஆனால் அப்படத்தின் மூலம் அறிமுகமான ஸ்ரீதேவி முதல் படத்திலேயே ரூ.5 ஆயிரம் சம்பளம் வாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... ஷூட்டிங்கிற்கு டைமுக்கு வர்றதில்ல... தயாரிப்பாளரின் குற்றச்சாட்டுக்கு கவின் கொடுத்த தரமான பதிலடி