விமான நிலையத்தில் விஜயை பார்த்து ஆர்ப்பரித்த கேரள ரசிகர்கள்! கை கூப்பி வணங்கி அன்பை வெளிப்படுத்திய தளபதி!
நடிகர் விஜய் 'கோட்' படத்தின் படப்பிடிப்புக்காக கேரள மாநிலம் திருவனந்தபுரம் வந்துள்ள நிலையில், விமான நிலையத்தில் கேரள ரசிகர்கள் விஜய் மீதான தங்களுடைய அன்பை வெளிப்படுத்திய வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
தளபதி விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்த 'லியோ' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 'கோட்' படத்தில் நடித்து வருகிறார்.
அப்பா - மகன் என விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கும், இந்த படத்தில் மகன் விஜய்க்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சௌத்ரியும்.. அப்பா விஜய்க்கு ஜோடியாக சினேகாவும் நடித்து வருகின்றனர்.
மேலும் முக்கிய கதாபாத்திரத்தில், பிரபுதேவா, பிரசாந்த், நிதின் சத்யா, வைபவ், பிரேம் ஜி, அஜ்மல், லைலா, மைக் மோகன், உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளது.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தை, ஏஜிஎஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. மேலும் இதுவரை விஜய் நடித்த படங்களை விட, வித்தியாசமான கதைகளத்தில் சயின்ஸ் பிக்சன் கதையம்சத்துடம் இப்படத்தை இயக்கி வருகிறார் வெங்கட் பிரபு.
தளபதி வருகையால் ஸ்தம்பித்து போன கேரளா..! ஏர்போட்டில் வீறுநடை போட்டு வந்த விஜய்யின் வீடியோ வைரல்!
சமீபத்தில், நடிகை திரிஷாவும் கேமியோ ரோலில் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. கிட்டதட்ட 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்ட நிலையில், இறுதி கட்ட படப்பிடிப்புக்காக தளபதி விஜய் மற்றும் படக்குழுவினர் திருவனந்தபுரம் செல்வதாக தகவல் வெளியான நிலையில்... இன்று மதியத்தில் இருந்தே தளபதி விஜய்யை எதிர்பார்த்து, அவரது ரசிகர்கள் பலர் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கார்த்திருந்தனர்.
சரியாக 5:00 மணி அளவில் தளபதி விஜய், திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தார். அவருக்கு விமான ஊழியர்கள் முதல்... ரசிகர்கள் வரை அனைவருமே உற்சாக வரவேற்பு கொடுத்தனர். விமான நிலையம் உள்ளே வந்த விஜய் தனக்காக காத்திருந்த ரசிகர்களை நோக்கி கையசைத்து தன்னுடைய அன்பையும், கைகூப்பி தன்னுடைய நன்றியையும் தெரிவித்தார். தற்போது இது குறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.