காலு மேல கால போடு இராவண குலமே... அரசியல் பேசி அதிரவிட்ட கீர்த்தி பாண்டியன் - மெர்சலான பா.இரஞ்சித்
பா.இரஞ்சித் தயாரித்துள்ள ப்ளூ ஸ்டார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகை கீர்த்தி பாண்டியன் அரசியல் பேசி அரங்கை அதிரவைத்துள்ளார்.
Keerthi Pandian
இயக்குனராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் தொடர்ந்து தரமான படங்களை கொடுத்து வருபவர் பா.இரஞ்சித். அந்த வகையில் அவரது நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அடுத்ததாக உருவாகி உள்ள திரைப்படம் ப்ளூ ஸ்டார். இப்படத்தை ஜெய் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர்கள் அசோக் செல்வன், சாந்தனு ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அதேபோல் நடிகைகள் கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி ஆகியோர் ஹீரோயின்களாக நடித்திருக்கின்றனர்.
Ashok selvan, Keerthi Pandian
கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்து உள்ளார். இப்படம் வருகிற ஜனவரி 25-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். இந்த விழாவில் நடிகை கீர்த்தி பாண்டியன் பேசிய பேச்சை கேட்டு இயக்குனர் பா.இரஞ்சித் சிலாகித்துப் போனார்.
இதையும் படியுங்கள்... Half Sareeயில் பதுமையாக மாறிய பூஜா ஹெக்டே.. ட்ரெடிஷனல் லுக்கில் வேற லெவல் போஸ் - லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ!
keerthi Pandian Speech
அப்படி அவர் என்ன பேசினார் என்பதை தற்போது பார்க்கலாம். அவர் பேசியதாவது : “பா.இரஞ்சித் பெயர் வந்தாலே அரசியல் பத்தி பேச ஆரம்பிச்சுட்டீங்களானு கேக்குறாங்க. பேசுனா என்ன தப்பு. நாம போடுகிற துணியில் இருந்து, குடிக்கிற தண்ணி, சாப்பிடும் உணவு என அனைத்திலும் அரசியல் இருக்கிறது. அதபத்தி பேசவில்லை என்றால், அது இல்லைனு அர்த்தமில்ல. ப்ளூ ஸ்டார் படத்துலையும் அரசியல் இருக்கு. ஏன் நாம எடுக்குற எல்லா படத்துலையும் அரசியல் இருக்கு.
Blue Star Audio Launch
பா.இரஞ்சித் தயாரிக்கும் படத்துலையும், இயக்கும் படத்திலையும் அவர் சொல்லும் விஷயம் ரொம்ப முக்கியமானது. அந்த விதத்தில் இந்த படத்தில் என்னோட பங்களிப்பு இருப்பதை ரொம்ப பெருமையாக கருதுகிறேன். இன்று இந்த இசை வெளியீட்டு விழா நடப்பதை நான் முக்கியமான நாளாக கருதுகிறேன். இந்த சூழலில் ப்ளூ ஸ்டார் படத்தில் வரும் அரக்கோணம் ஸ்டைல் பாடலில் இடம்பெறும் பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது எனக்கூறி, காலு மேல கால போடு இராவண குலமே, மேல ஏறும் காலமாச்சு ஏறியாகணுமே என கூறி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு சூசக பதிலடியும் கொடுத்துள்ளார். கீர்த்தியின் இந்த அரசியல் பேச்சைக்கேட்டு அருகில் இருந்த பா.இரஞ்சித் கைதட்டி பாராட்டினார்.
இதையும் படியுங்கள்... ரசிகர்கள் கொடுத்த பக்கா மாஸ் Surprise.. மிரண்டுபோன பிக் பாஸ் மணிச்சந்திரா - வேற லெவல் Celebration Video இதோ!